காற்றில் கலந்த நறுமணமா!?
வார்த்தைகுள் அடைந்த அர்த்தமா.!?
முத்தத்தின் இதமா.!?
உச்சத்தின் சுகமா.!?
மேகத்தின் இடியா!?
மின்னலின் ஒளியா.!?
கோடையின் வதையா.!?
இரவின் கதையா.!?
பூ தலையாட்டும் தென்றலா.!?
புல்லாங்குழல் தரும் இசையா.!?
இறைவனிடம் கேட்ட பிரார்த்தனையா.!?
இறைவன் இட்ட பிச்சையா.!?
இதில்
எது நான்
இது
எல்லாமும் நான்.!
No comments:
Post a Comment