Sunday 14 November 2021

முதுமலரின் அந்திமம்..!(இறுதி காலம்)

 விதையாய் விழுந்தேன்

துளிராய் முளைத்து

செடியாய் வளர்ந்து

மரமாய் விரிந்து

பெரும் மரமாய் ஆனேன்


என்னிலும்

பூ பூத்தது

காய் காய்த்தது

பழம் பழுத்தது

விதைகளும் விழுந்தது


பறவைகள் வரும்

பழம் தின்னும்

எச்சத்தை மிச்சம் 

வைத்துச் செல்லும்


படர்ந்த மரம் நான்

பட்ட மரமானேன்


எனது வழி விதைகளும்

என்னில் நின்று தின்ற பறவைகளும்

காத்திருக்கிறது.!


எப்போது முதுமலரின் அந்திமம் முடியும்

கொள்ளி வைத்து செல்லலாம் என்று.!


1 comment: