சகோதரி ஹாதியாவே.....
உனது மொழி எனக்குத் தெரியாது
உனது வலி எனக்குப் புரியும்!
உனது உறைவிடம் எனக்குத் தெரியாது
உனது உணர்வு எனக்குப் புரியும்!
உனது காயங்கள் எனக்குத் தெரியாது
உனது கண்ணீர் எனக்குப் புரியும்!
நீயும் நானும் ரத்த உறவுகளல்ல
அதனால் என்ன
நாம் ஈமானிய உறவுகள்!
நீ வடித்த கண்ணீர்
நீ அறியாதவர்களை கலங்கச் செய்து விட்டது!
உனது கதறல்
சஜ்தாவில் விழ வைத்து விட்டது!
நீ வெற்றி அடைந்து விட்டாய்!
ஆம்
வரலாறுகளை படித்தவர்களுக்கு
வரலாறாய் தெரிகிறாய்..!