Sunday 19 November 2017

வாசி..!!

வாசிப்பு ஒரு சிறுப்பொறி ,அது சிந்தனைத் தீயை பற்ற வைப்பதினால்!

வாசிப்பு ஒரு தாய்மடி,அது சோகத்தின் போதெல்லாம் தலைக்கோதி விடுவதினால்!

வாசிப்பு ஒரு கலங்கரைவிளக்கம் ,அது குழப்ப இருளின்போது வெளிச்சமாய் தெரிவதினால்!

வாசிப்பு ஒரு ஆசை முத்தம்,அது நினைக்கும் போதெல்லாம். இனிப்பதினால்!

வாசிப்பு ஒரு உளி,அது மனதினை செதுக்குவதினால்!

வாசிப்பு ஒரு கோடை மழை,அது வறண்டுப்போன நெஞ்சத்தை குளிர்விக்க செய்வதினால்!

ஆதலால்
வாசி வாசி!

கொஞ்சம் உன்னையாவது
நீ நேசிப்பாய்!






1 comment:

  1. வாசி..... நல்ல கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete