Monday 11 July 2011

கொள்ளை அழகு..!

பார்த்ததென்னவோ-
ஒரு நொடி தான்!

அடங்கியதென்னவோ-
உயிர் நாடி தான்!

சின்னதாக ஒரு -
புன்னகை!

சீரழிந்தது ஒரு -
வாழ்கை!

திரும்பி பார்த்தாள்-
திமிருடன்!

திரும்ப வரவே இல்லை -
என் திமிர்!

கொஞ்சி கொஞ்சி -
பேசியே!

கெஞ்சி கெஞ்சி -
அலைய விட்டாயே!

கிழிஞ்ச பாய் கூட -இல்லை
படுக்க!

முயற்சிக்கிறேன் -உன் பிஞ்சு
பாதத்திற்கு பூ விரிக்க!

சேலை எனும் -திரைக்குள்
இருந்து கொண்டே!

காதலெனும் -சிறைக்குள்
என்னை தள்ளி விட்டே!

வெள்ளந்தியா -நீ
சிரித்தாய்!

தீயில் வெல்லமாக-எனை
ஆக்கினாய்!

என்னை கொள்ளை இட்டாய் -
உனதழகில்!

ஓ!
அதனால்தான் -உன்னை
'கொள்ளை'அழகு-
என்றார்களோ...!

No comments:

Post a Comment