பார்த்ததென்னவோ-
ஒரு நொடி தான்!
அடங்கியதென்னவோ-
உயிர் நாடி தான்!
சின்னதாக ஒரு -
புன்னகை!
சீரழிந்தது ஒரு -
வாழ்கை!
திரும்பி பார்த்தாள்-
திமிருடன்!
திரும்ப வரவே இல்லை -
என் திமிர்!
கொஞ்சி கொஞ்சி -
பேசியே!
கெஞ்சி கெஞ்சி -
அலைய விட்டாயே!
கிழிஞ்ச பாய் கூட -இல்லை
படுக்க!
முயற்சிக்கிறேன் -உன் பிஞ்சு
பாதத்திற்கு பூ விரிக்க!
சேலை எனும் -திரைக்குள்
இருந்து கொண்டே!
காதலெனும் -சிறைக்குள்
என்னை தள்ளி விட்டே!
வெள்ளந்தியா -நீ
சிரித்தாய்!
தீயில் வெல்லமாக-எனை
ஆக்கினாய்!
என்னை கொள்ளை இட்டாய் -
உனதழகில்!
ஓ!
அதனால்தான் -உன்னை
'கொள்ளை'அழகு-
என்றார்களோ...!
No comments:
Post a Comment