Monday 4 July 2011

மூக்குத்தி....!

 என்னவளே!
கண்மாயிலா !?
மூழ்கி போனது -
உன்-
மூக்குத்தி!

என் -
மயிலே!
மூக்குத்தி மட்டும் -
மூழ்கிடவில்லை!

அண்மையிலே தானே-
என்-
மனதும் -
அதில் -
ஒட்டி கொண்டது!

அடி பாவி!
தனிமையிலே-
சொல்கிறேன் !
காசுக்காரி -
உனக்கு -
ஒன்னு போனால்-
இன்னொன்னு!

உண்மையிலேயே!
எனக்கு -
இருந்த -
மனசோ-
ஒன்னே ஒன்னு!

No comments:

Post a Comment