Tuesday 10 January 2012

மன்னிப்பு!

மழையையும் -
இடிகளையும்-
தருவதுண்டு-
மேகம்!

அம்மேகங்களை-
வெறுப்பதில்லை!-
மனம்!

சூட்டினால்-
புண்ணாக்கிய-
உணவையும்-
சுவைக்க-
மறுப்பதில்லை-
நாக்கு!

சாலை விபத்துகளால்-
சாலை பயணத்தை யாரும்-
விடுவதில்லை!

தெருவுல வீசுவதில்லை-
தன் மடியில்-
சிறு நீர் கழித்த-
 குழந்தையை!

ரசிக்காமல் இருப்பதில்லை-
அழிவுகளை தந்த -
கடலையும்!

பிரச்சனை பேசுவதில்லை-
நேரந்தவறி வந்த -
பேருந்திடம்!

யாரும் விட்டு போக-
விரும்புவதில்லை-
பொறுமை இழந்து -
குலுங்கும்-
பூமியை!

இவையெல்லாம் -
ஏற்றுகொள்ளும்-
மனதுக்கு!

"காயபடுத்திவர்களை"-
மன்னிக்க மறுப்பது-
எதெற்கு?

2 comments:

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_5.html) சென்று பார்க்கவும்...

    ReplyDelete
    Replies
    1. baalan sir!

      mikka nantri!
      theriyapaduthiyathukku...

      Delete