Sunday 8 January 2012

வாலிபனே...!

வாழ்வு என்பது-
நண்பர்களிடம் -
"மொக்கை" போடுவதும்!

பெண்ணை கண்டால்-
"கடலை"போடுவது தானா!?

ஆராய்ச்சி நடக்குதடா-
வட்ட நிலவுல!

அசிங்கம்டா -
"வட்ட வட்ட" -
புகை விடுவதிலே!

ஒரு கிராம்-
தங்கம் இருக்காம்-
ஒரு டன் -
மண்ணுல !

உன் குடும்ப எதிர்காலம்-
இருக்குதடா-
உன் வளமான-
வாழ்வுல!

உறக்கம் போதாதா?
ஓய்வும் போதாதா?-

இவ்விரண்டிலும்-
கழிவதுதான்-
உன் வாழ்வானதா?

பொறந்து இருக்கலாம்-
பணக்கார அப்பனுக்கோ!

கட்டி இருக்கலாம்-
பணக்கார பொண்ணையோ!

இதில் சிறப்பு அடையுமோ-
உன் பிறவி பயனோ?

கௌரவம் இல்லை -
அடுத்தவன் பணம்-
லட்சங்களை வைத்து கொள்வதிலே!

மானமும் மரியாதையும்-
உள்ளது -
உழச்ச பணத்தில் மிச்சம் -
ஒரு ரூபாய்-
உன் கையில-
 இருப்பதிலே!

எச்ச"தண்ணிக்கும்"-
எச்சி பீடிகளிலும்-
கழியனுமா?-
உன் மிச்ச வாழ்கையும்!

பாட்டில்"களில்- 
பங்கு தருபவன்!
சாப்பாட்டில் -
பங்குதர மாட்டான்!

பெரியவங்களை குறை-
சொல்லாதே!

பெருசா-
 என்ன-
 நாம் செய்தோம் -
என்பதை -
எண்ண மறவாதே!

படைத்ததின் நோக்கத்தை -
அடையுதடா-
படைப்புகளெல்லாம்!

படைப்புகளில்-
சிறந்தவனே!

உன் வாழ்வு-
வீணாக கழியலாமா?

முழிசிகிட்டு இருக்கையிலேயே-
முழுசா முழுங்குற -
உலகம் இது!

இங்கே தூக்கத்துல -
இருந்தா என்ன ஆவது!

உனக்காக -
எனக்காக-
உலகம் நிக்காது!

உருப்படியான வாழ்வு-
வாழ நீ-
ஓடு !

ஓடுனால்தான் -
நீர் நதியாகும்!

தேங்கினால்-
அது-
சாக்கடையாகும்!

நீ எப்படி-
உயிருள்ள பிணமா!!?

இல்லை -
உயிர் போன-
பின்னும் -
வாழுபவனா?(சாதனையாளனா)

No comments:

Post a Comment