Tuesday 1 May 2012

தொழிலாளி!

சாலையில-
பயணிக்கும்-
வாகனம் முழுக்க-
ஏ சி!

சாலை தொழிலாளி-
உடம்பெல்லாம்-
தூசி!

கொதிக்கும்-
தாறு!

அதை விட-
எரிக்கும்-
வெயிலு!

கருவாடாகும்-
உடலு!

காலில்-
சாக்கினால் ஆன-
காலுறை!

வாழ்விலோ-
மாறாத-
வறுமை!
--------------
இரவால்-
இழிவா!?

பகலால்-
பொழிவா!?

இரண்டும்-
இல்லாத வாழ்வா!?

ஊதியம் அளிப்பவன்-
உயர்தவரா!?

பெறுபவர்தான்-
தாழ்ந்தவரா!?

இவர்கள்-
இணையாத-
இரு கோடா!?

உண்மை-
ஒரு கோடின்-
இரு முனைகளல்லவா!?
-----------------------------
சிறப்புண்டோ-
குல வழி-
பிறப்பாலோ?

பண கட்டின்-
இருப்பாலோ!?

ஏற்ற தாழ்வு-
உலகின் நியதி!

தொழிலால்-
தீண்டாமை -
பேசுபவன்-
மனித குல எதிரி!
---------------------/
வாங்கும் வட்டியை-
விட!

விக்கும் மதுபான-
புட்டியை விட!

கழிவறை கழுபுவரும்-
கல்லுடைப்பவரும்-
மேலடா!!
--------------------------
ஊதியத்துக்காக-
உழைப்பவன்-
சம்பாதிக்கிறான்!

உளபூர்வமாக-
உழைப்பவனோ-
சாதிக்கிறான்!
----------------------
வியர்வை உலரும்-
முன்னே-உழைப்பவருக்கு
ஊதியம் வழங்கிடு!-
நபி மொழி!

நாம் மறக்க கூடாத-
பொன் மொழி!
----------------------

20 comments:

  1. மே தின சிறப்புக் கவிதை
    மிக மிக அருமை
    மே தின நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ayya!

    ungal muthal varavukku-
    mikka nantri ayya!

    ReplyDelete
  3. //வாங்கும் வட்டியை-
    விட!

    விக்கும் மதுபான-
    புட்டியை விட!

    கழிவறை க ழு வு ப வ ரு ம்-
    கல்லுடைப்பவரும்-
    மேலடா!!//

    அருமை அருமை ! பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ayya!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  4. தொழிலாளர் தின சிறப்பு கவிதை

    சிறப்பா இருக்கு - கேட்கும் கேள்விகள் யோசிக்க வைக்குது

    பாராட்டுக்கள்

    ReplyDelete
  5. வியர்வை உலரும்-
    முன்னே-உழைப்பவருக்கு
    ஊதியம் வழங்கிடு// நபிகள் சொன்னாலும் சரி நாம சொன்னாலும் சரி கேட்பவர் சில பேரே . அருமைங்க .

    ReplyDelete
    Replies
    1. sasikala;

      ungal varavukkm-
      karuthukkum mikka makizhchi!

      Delete
  6. சிறப்புண்டோ-
    குல வழி-
    பிறப்பாலோ?

    பண கட்டின்-
    இருப்பாலோ!?
    >>
    இதில் சந்தேகமென்ன பணக்கட்டினால்தான் சிறப்பு சகோ

    ReplyDelete
    Replies
    1. raaji!

      appudiyaa!?

      nenga vanthathukku-
      karuthu sonnathukku nantri!

      Delete
  7. //ஊதியத்துக்காக-
    உழைப்பவன்-
    சம்பாதிக்கிறான்!

    உளபூர்வமாக-
    உழைப்பவனோ-
    சாதிக்கிறான்!//

    மனோதத்துவ நூல்களில் பக்கமாக பக்கமாக கூறப்படும் ஒரு பெரிய தத்துவத்தை சிம்பிளா சில வரிகளில் எளிமையாக எழுதும் பாணி உங்களுக்கே உரியது சீனி. கவிதைன்னா அதுதான். உரையில் பல பக்கங்களாக பேச்சில் பலமணி நேரங்களாக கூறப்படும் விஷயங்களை சுருக்கமாக சில வரிகளில் சொல்பவன்தான் கவிஞன்.

    ReplyDelete
  8. asarath!

    nenga sonnathukku-

    enathu-
    pathil!

    alhamthulillaah!
    maasha allaah!

    ReplyDelete
  9. தார் ஊற்றி சாலை போடும் தொழிலாளர்கள் கண்முன்னே கவலையோடு வந்து போகிறார்கள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. nanpaa!

      ungal muthal varavukku mikka nantri!

      Delete
  10. எத்தனை விஷயத்தைத் தொட்டுக் கவிதை எழுதியிருக்கிறீர்கள் சீனி.சமூகத்துக்கான பிரம்பொன்று உங்கள் கைகளில் !

    ReplyDelete
    Replies
    1. hemaa!

      appadingalaa!?

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  11. உழைப்பாளர் தினத்தில் உழைப்பின் பெருமை சொல்லி நிற்கிறது கவிதை

    ReplyDelete
    Replies
    1. ayya!

      ungal varavukkum-
      pinnoottathirkum mikka nantrikal-
      ayya!

      Delete
  12. //ஊதியத்துக்காக-
    உழைப்பவன்-
    சம்பாதிக்கிறான்!

    உளபூர்வமாக-
    உழைப்பவனோ-
    சாதிக்கிறான்!//
    நல்ல வரிகள்......+ சின்ன சின்ன சிந்தனை அருமை

    ReplyDelete
  13. avarkaile!

    ungal varavukku nantrikale!

    ReplyDelete