Friday 27 January 2012

என் நாட்டு மக்களே...

என்னருமை -
இந்திய மக்களே!
பதில் இருந்தா -
சொல்லுங்களேன்!

மக்கள் தொகையோ-
நூறு கோடிக்கு மேல'!

எத்தனையோ-
 மக்கள்கிடக்குறாங்க -
தெரு கோடியில!

சுதந்திரம் கிடைத்து-
ஆகிவிட்டது-
அறுபது ஆண்டுக்கு-
மேல!

அதிகமா பசியில-
சாவுறாங்க -
குழந்தைங்க-
நம்ம நாட்ல!

எத்தனையோ பேர்-
இறந்தாங்க-
சுதந்திர போராட்டத்துல!

இப்ப நடக்குற அரசியலோ-
மண்ண அள்ளி போடுடுசி-
அவங்க நினைப்புல!

நாட்ல உயர்வது-
அம்பானிகள்"!

இதில் -
எங்கே இருக்காங்க -
ஏழைகள்!?

வெள்ளைக்காரன்-
பிரித்தாளும் சூழ்ச்சியால்-
ஒண்ணா இருந்த-
ஹிந்து-முஸ்லிம் மக்களை-
பிரிச்சான்!

இப்ப ஆட்சி வெறி -
பிடிச்சவங்க -
மதவெறி-
ஊட்டி மக்களை -
அடிச்சிக்க வைக்கிறான்!

கலவரம் செய்து-
கொல்வது -
பாசிச பயங்கரவாதம்!

சுட்டு கொல்வது(போலி என்கௌன்டர்)-
அரச பயங்கரவாதம்!

மக்களை திசை திருப்ப
பயன்படும் சொல்-
தீவிரவாதம்!

காங்கிரசால் -
நாடு உருப்படாம -
போனது!

பி ஜே பி யால்-நாடு
சுடுகாடானது!

ஓ!
வஞ்சிக்க பட்டவர்களே!
வாழ வழி இல்லாதவர்களே!

சிறுபான்மை மக்களே!
சிறுமை படுத்தபட்டவர்களே!

தாழ்த்த பட்டவர்களே!
தாழ்ந்தே "இருக்க -கட்டாயபடுத்தபட்டவர்களே!

உங்களுக்கு கவலை-
வேண்டாம்!

இனி கண்ணீர்-
வேண்டாம்!

உங்களது உரிமையை-
மீட்டெடுக்க!

உங்களுக்காக-
குரல் கொடுக்க!

கணிசமான வாக்குகள்-
கடந்த சட்டமன்ற தேர்தலில்!

"கண்ணியமான"வெற்றிகள்-
உள்ளாட்சி தேர்தலில்!

கண்டிட வேண்டுமா-?
மக்கள் கண்ணீர் வடிக்காத
காட்சியை!

மக்கள் அனைவரும்-
இணையுங்கள் -
எஸ்.டி.பி.ஐ என்ற -
தேசிய கட்சியில்!

No comments:

Post a Comment