Tuesday 31 January 2012

ஏன் இந்த கொலைவெறி..!

கடல் அட்டை-
கடல் குதிரை-
இருக்கு-
பிடிக்க தடை!

கடல்ல மீன் பிடிக்க செல்லும்-
மீனவனை சுட்டு -
கொல்ல எவன் கொடுத்தான்-
உரிமை!

அவையெல்லாம் -
அறிய வகை-
உயிரிணமாம்!

அரசு -
கண்டுக்க மறுக்குதே-
அதை விட -
மீனவன் என்ன-
அற்ப ஜென்மமா?

ஒரு -
தடவை நடந்தால்-
அது தவறு!

அதுவே -
தொடர்ந்தால்-
திமிரு!

ஒண்ணா இரண்டா?
செத்து இருக்காங்க -
ஐநூறுக்கும் மேலடா!

கண்டன ஆர்ப்பாட்டம்-
கண்ட பொதுக்கூட்டம்-
நடந்து இருக்கு-
எத்தனை!

அரசு கண்டுக்காம இருந்தா-
என்ன முறை!

மரண தண்டனை கூடாதுன்னு-
குரல் எழும்புது-
கொலை செய்தவனுக்கும்!

ஏன் இந்த கதி-
என்நாட்டு மீனவனுக்கு!

இந்தியனுக்கே நடக்குது-
உயிர் இழப்பு!

நியாயம் பேசினால்-
வழக்கு பாயுது -
இந்திய இறையாண்மைக்கு-
எதிர்ப்புன்னு!

நாட்டை நேசிப்பது -
குடிமகனின் உரிமை!

குடிமகனின் உயிரையும்-
உடமையையும் காப்பது-
அரசின் கடமை!

செய்யாமல்-
கடமையை!

எதிர்பார்க்கலாமோ-
உரிமையை!

உயிர் இழப்பு நடக்கும்போதும்-
கலவரங்கள் நடக்கும்போதும்-
நடவடிக்கை எடுத்து தடுக்கல!

ஒரு நாயும் பயப்படாது-
"அறிக்கை" மட்டும் -
வெளியிடுரதுல!

No comments:

Post a Comment