Wednesday 20 May 2015

கவிதையே..!(6-10)

6)
காதலும்,கவிதையும்
மொட்டுக்களைப் போன்றது!

எப்போது பூக்கும் என
யாருக்கும் தெரியாது!

---------------------
கவிதையே..!(7)
-----------------
என்னைப் பிரிந்தவர்கள்
என்னைப் புரிந்தவர்களில்லை!

என்னைப் புரிந்தவர்கள்
என்னருகில் இல்லை!

கவிதையே!
நீ மட்டும் எப்படி
என்கூடவே இருக்கிறாய்..!!??

என்னைப் புரிந்ததாலா!?
புரியாததினாலா.!?
-------------------------
கவிதையே.!(8)
---------------
எனது எண்ணத்துளியினை
எனது மௌனச்சிப்பியினுள்
அடைகாத்துத் திறந்துப் பார்த்தால்!

நீ தான் 
சிரிக்கிறாய்!

"கவிதையே"!
--------------------------
கவிதையே.!(9)
----------------
நான் பேசாத 
நேரங்களில் !

எனது பேனா
பேசினால்!

அது
கவிதையே!
------------------
கவிதையே.!(10)
---------------
உன்னைத் தேடி
எடுக்க!

எத்தனைத் தடவைதான்
என்னை நான் தொலைக்க!?
--------------------

1 comment:

  1. பேனா மட்டுமல்ல... தட்டச்சு செய்வதெல்லாம் அருமை...

    ReplyDelete