Wednesday 6 May 2015

யாரிங்கே முட்டாள்கள்..!!?

பாகற்காய் இனித்திடும்!
நீலவானம் "வெளுத்திடும்"!

இந்துமகா சமுத்திரம் குடி நீராகிடும்!
அருவிகள் மேல் நோக்கிப் பாய்ந்திடும்!

வடக்கில் சூரியன் உதிக்கும் !
நிலவு இனி தேயாதிருக்கும்!

இப்படியெல்லாம் சொன்னார்கள்!
ஆட்சியைப் பிடித்தார்கள்!

இதுவரை ஒரு ஆணியையும் புடுங்கவில்லை!
நாகரிகம் கருதி "ஆணி"என சொல்வதைத் தவிர வேறுவழி தெரியவில்லை !

குனிய குனிய கொட்டுபவனும் முட்டாள்!
கொட்ட கொட்ட குனிபவனும் முட்டாள்!!
என்பார்கள் கிராமத்தில் !

இங்கே யார் முட்டாள்கள்!?
தொடர்ந்து ஏமாற்றும் ஆட்சியாளர்களா !?
ஏமாற்றுவார்களை ஆட்சியிலேற்றும் என் தேச மக்களா.!? 

       

2 comments:

  1. அயோக்கியரை தேர்வு செய்யும் மக்கள்தான் நாம்தான் முட்டாள்கள்

    ReplyDelete