Monday 19 March 2012

மீசை!

ஏங்கியதுண்டு -
முளைக்காதா?-
என்று!

வருந்துவது-
இன்று-ஏன் இப்படி
முளைக்குது ?-
என்று!
----------------------
குறும்பு செய்ய -
சொல்லுதாம்-
அரும்பு மீசை!

இளசுகளை-
மிஞ்சுது-
"வெளுத்த" மீசை!
-----------------------
அழகா?-
தெரியவில்லை!
ஆணின் வகை வகையான-
மீசை!

அழகில்லாம-
வேறென்ன!?-
பெண்களின் பூனை-
மீசை!
----------------------
பூனைக்கும்-
புலிக்கும்-
மீசை உண்டு!

கோழைக்கும்-
வீரனுக்கும்-
மீசை உண்டு!

"அவன்" பூனையா?
புலியா?-
செயல்பாடால் -
வேறுபடுவதுண்டு!
-----------------------
அநியாயத்தை-
தட்டி கேட்காதவனும்!

கவலையும்-
கண்ணீருமாய்-
தாயை வைத்திருப்பவனும்!

அடியவும் மிதியவும்-
பொண்டாட்டிக்கு -
கொடுப்பவனும்!

ஆம்பளை என்று-
அலட்டி கொள்ளாதே!

உதட்டின் மேல்-
மீசை இருப்பதாலே!
--------------------------
அடையாளம் தெரிவதில்லை-
ஆணுக்கும் பெண்ணுக்கும்!

ஆடையிலும்-
அலங்காரத்திலும்!

கடைசி -
மிச்சம்'

மீசை-
மட்டும்!
---------------------
வெறுப்புக்கு உரியவன்-
முன்- கல்லாவாய்!

விருப்பதுக்குரியவர் -
முன்- கவிதையாவாய்!

அது பெண்ணே-
நீயாவாய்!

உன் விருப்பத்தை-
பொறுத்தே!

நெரிஞ்சி முள்ளாவது!
இனிக்கும் கரும்பாவது!

ஆணின் மீசையாவது!
----------------------
விடாத தாலாட்டு-
கடல் அலை!

மழுங்க வளித்தாலும்-
வளரும் மீசை!

வெட்டி போட்டாலும்-
துளிர்விடும்- கிளை!

தோல்வி தொடர்ந்தாலும்-
வேகம் கொள்ளனும்-
வெற்றியின் மேல்-
ஆசை!
-----------------------

8 comments:

  1. மீசை
    பற்றிய நல்ல கவிதைகள்
    சில விஷயங்களை மிக ஆழமாக சொன்னீங்க
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
    Replies
    1. seythali;

      ungaludaya karuthukkum-
      urchaaka moottalukkum mikka nantri!

      Delete
  2. மீசைக்கும் ஒரு அழகான அனுபவ வரிகள் அருமை .

    ReplyDelete
    Replies
    1. sasikala!

      ungal karuthukkum-
      varavukkum mikka nantri!

      Delete
  3. மீசைக் கோணங்களா....சிந்தனை அழகு மீசையைப்போலவே !

    ReplyDelete
    Replies
    1. Hemaa !

      unagal aatharavukku-
      mikka nantri!

      Delete
  4. meesaiyilum kavithaiyaaaa ...super

    ReplyDelete