Tuesday 20 March 2012

நியாய தீர்ப்பு !

ஆராரோ ஆரிரரோ!
பிறப்பதற்கு முன்னே-
நீ யாரோ!
நான் யாரோ!

இறப்புக்கு பின்-
நாமெல்லாம்-
யார் யாரோ!

உயிர் இருக்கும்
வரையிலே- 
நாமெல்லாம் உறவோ?

ஒன்று தான்-
நாம் -
"வந்த "இடமும்!
"போகும்"இடமும்!

"இன்னெதென்று" இல்லாததை-
இன்னாரென்று -
உருவாக்கியவன் எவனோ!?

அவனே-
இறந்த பின் உயிர்-
கொடுத்து எழுப்பகூடியவனே!

மண்ணு மேல-
வாழலாம் என-
மனிதனுக்கு நப்பாசை!

மனிதனை சாப்பிட-
மண்ணுக்கு -
தீராத ஆசை!

மண்ணா போன-
மனிதனுக்கோ- 
தீரல-
ஆதிக்க ஆசை!

"அடங்கிடும்"-
வாழ்வில்!
ஆணவமும்-
அகம்பாவமும்-
ஏனடா!?

"தீர்க்க படும்"-
ஒரு நாள்-
நியாய தீர்ப்படா!?

கள்ள காதல்-
கௌரவமா -
பார்க்கபடுது!

கஞ்ச தனம்-
" காரிய"தனமா-
தெரியபடுது!

அடுத்தவன்-
"குடியில" கொள்ளி-
வைக்கிறது-
குல தொழிலானது!

கொல்லும் அரசுகள்-
வல்லரசாக பவனி-
வருது!

தந்திர புத்தி-
சாணக்கிய தனமாக்கபடுது!

எளியவனை-
வலியவன்- 
துன்புறுத்துவது-
 வீரம்-
 எனபடுது!

அரக்க பறக்க-
கொல்பவன்- 
ஆட்சியில-
அழகு பார்க்கபடுது!

அநியாயத்தை-
ஒத்து போகிறவன்-
பொழைக்க தெரிந்தவன் என- போற்றபடுது!

இவை தவறென-
சொல்பவன்-
பைத்தியக்காரன் என- 
தூற்றபடுது!

தப்பிக்கலாம்-
எத்தனையோ-
வழக்கில்!

நியாயம்-
கிடைக்கும்-
இறைவனின்-
"கணக்கில்"!

12 comments:

  1. சிந்தனையின் வீச்சு பிரமிக்க வைக்கிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramani ayya!
      ungalin muthal varavukkum-
      karuthukkum mikka nantrikal ayya!

      Delete
  2. நல்ல கவிதை
    சிறந்த சிந்தனைகள்
    அருமை பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. seythali;
      ungal katuthukkum-
      varavukum mikka nantri!

      Delete
  3. "இன்னெதென்று" இல்லாததை-
    இன்னாரென்று -
    உருவாக்கியவன் எவனோ!//
    விடை தெரியா கேள்விகள் அருமை .

    ReplyDelete
    Replies
    1. sasikala;
      ungal karuthukkum-
      varavukkum mikka nantri

      Delete
  4. ஆழமான கருத்துக்களைக் கூட எளிமையாக சொல்லிப் புரிய வைக்கும் உங்களின் திறமையே திறமை.

    ReplyDelete
    Replies
    1. asarath!

      ungal varavukku mikka nantri!

      ungal karuthukku-
      "ella pukazhum iraivanukke"
      enpathai thavira vera ethuvum
      solla mudiyala..!

      Delete
  5. பச்சோந்தியான உலகமிது சீனி.மாறுபவர்களும் மாற்றுபவர்களுமாய் எதிலும் எங்கும் நேர்மையில்லை !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!

      athanaal thaan oru naal
      niyaayam kidaikkanum.....

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  6. romba super senu

    ReplyDelete