Monday 12 March 2012

இடை தேர்தல்!

வாய்ய்பு-

பணத்தை மக்கள்-
வாங்கி கொள்ள!

வெற்றி கொள்பவருக்கு-
"கொள்ளை " அடித்து-
கொள்ள!
----------------------------

அன்று-
மக்கள் வாழ்த்து-
பல்லாண்டு காலம்-
வாழ்க என்று!

இன்று-
ஜெயித்தவுடனே-
சாகட்டும் - என
எதிர்பார்ப்பு!

அப்போதானே-
"பணம்" பட்டுவாடா-
ஆகும் அண்ணே!
-----------------------

அமைச்சர் பதவி-
சுழற்சி முறை!

முதவர் பதவிக்கு-
ஏன் இன்னும்-
வரலை!
--------------------
கட்சிகள்-
கொடுப்பது-"ஓட்டுக்கு"
பிச்சை!

மக்கள் கொடுப்பது-
"வாங்கியதுக்கு" - வாக்கு
பிச்சை!
-----------------------------
தமிழ் நாடே -
சங்கரன் கோயில்-
பார்க்குது!

தமிழ் நாடு -
இருட்டுல கிடக்குது!
---------------------------
"பதவிகளெல்லாம்-"
இருக்குது-சங்கரன்
கோயிலுல!

பதவியை வாங்கி கொண்டு-
மறந்து விட்டது-
தொகுதிய!
----------------------------------
அம்மா ஜெயித்தால்-
அய்யாவும்!

அய்யா ஜெயித்தால்-
அம்மாவும்!

வரமாட்டாங்க-
சட்ட சபைக்கு!

போட்டி போட்டு கொண்டு-
போறாங்க-
பிரசாரத்துக்கு!
------------------------------
சீர் செய்ய படாமல்-
இருக்குது எத்தனையோ-
கோயில்கள்!

மக்களை திசை திருப்ப-
பயன்பதுவார்கள்-
ராமர் கோயிலை!

அமைச்சர்கள் சீர் செய்ய-
எத்தனையோ கிடக்குது-
சுத்தி கொண்டு அலைகிறார்கள்-
சங்கரன் கோயிலை!
-------------------------------
உருவாகுவார்கள்-
"திடீர்" வள்ளல்கள்!

ஆட்சி முடிந்ததும்-
பாயும் ஊழல்-
வழக்குகள்!
--------------------------

10 comments:

  1. அமைச்சர் பதவி-
    சுழற்சி முறை!

    முதவர் பதவிக்கு-
    ஏன் இன்னும்-
    வரலை!
    --------------------


    நல்லாக் கேட்டீங்க சீனி.

    ReplyDelete
    Replies
    1. munaivare!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  2. இடைத்தேர்தல் கூத்துக்களை பற்றி ஒரு கவிதையை போட்டு அசத்திடீன்கள் தோழரே... நன்றி.

    ReplyDelete
    Replies
    1. puthiya thentral;
      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  3. இடைத்தேர்தல் பற்றிய நல்ல கவிதைகள்
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. seythali!

      ungal karuthukkum-
      varavukkum mikka nantri!

      Delete
  4. suoeraa irukku seenu

    ReplyDelete
  5. அரசியல் அரசியல் !

    ReplyDelete