Monday 5 March 2012

கண்ணீர் !

காய்ந்து விடும் -
கன்னத்தில் வடியும்-
கண்ணீர்!

கருணை உள்ளத்தை-
அது காயபடுத்தும்!
--------------------------
வருவது-
சில துளிகள்!

சொல்லும்-
ஆயிரம் வலிகள்!
-----------------------
உப்பு -
கரிப்பது!

ஒரு நாள்-
அநீதியாளனை -
அழிப்பது!
---------------------
விலாசம் இல்லாமல்-
அழும் குழந்தை!

மோகத்தில்-
விரசம் கொண்டவர்களின்-
"எச்சை"!
-------------------------
இருக்கும்-
கரும்பாறைக்குள்ளும்-
நீர்!

வரும்-
இரக்கம் உள்ளவனிடமே-
கண்ணீர்!
----------------------------------
வாய் விட்டு-
சிரித்தால்-நோய்
விட்டு போகும்!

மனம் விட்டு அழுதால்-
மனதின் பாரம் -
குறையும்!
-----------------------------
பெண்களுக்கு-
ஆயுதம்!

ஆண்களுக்கு-
அவமானம்!
----------------------
அபராதம்!
அம்பதாயிரம்!

கற்பழித்தவர்களுக்கு-!

இருளர் சமூக-
பெண்களின் கற்ப்புக்கு!

விலை சொல்ல -
முடியுமா?

அப்பெண்களின்-
அவமானத்திற்கும்!
கண்ணீருக்கும்!
-------------------------
ஏழைகளின் சிரிப்பில்-
கடவுளை காண்கிறேன்-என
அண்ணா சொன்னது!

அண்ணா "இருந்ததும்-"
அண்ணா பேரை தாங்கி-
இருக்கும் கட்சிகளின்-
ஆட்சியோ!

ஏழைகளுக்கு தருவது-
கண்ணீர் அல்லவோ!?
----------------------------
"போரினால்" வற்றி போச்சி-
நிலத்தடி நீர்!

போரினால் வற்றி விட்டதே-
மக்களின் கண்ணீர்!
--------------------------
உணர்வுகளின்-
வெளிபாடு!

"வெளி"இடுபவர்க்கே-
விளங்கும்-அந்த
நிலை பாடு!
-----------------------------

6 comments:

  1. கண்ணீரின்
    கதை சொல்லும்
    அர்த்தமுள்ள வரிகள்

    அருமை பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. seythali!

      ungal varavukku-
      karuthukku mikka nantri!

      Delete
  2. arumai/....super seenu

    ReplyDelete
  3. கண்ணீருக்கும் அர்த்தங்கள் நிறைய என்பதை ஒவ்வொன்றாக விளக்கியிருக்கிறீர்கள்.அருமை !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!

      unagal aatharavukkum-
      karuthukkum-
      mikka nantri!

      Delete