Sunday 18 March 2012

யார் குற்றம்.....?

உலகை -
படைத்தவனா?

எனது -
உனது -என-
நிலங்களை -
பிரித்து கொண்ட -
மனிதனா!?

அடையாளங்கள்-
தெரிந்து கொள்ள-
உருவம் தந்தவனா?

"உருவங்களை" வைத்து-
உயர்ந்தவன் -தாழ்ந்தவன்-
என-மடிந்து கொள்பவர்களா?

மொழிகளின் வழி-
புரிந்து கொள்ள-
வைத்தவனா?

மொழிகளின் பேரால்-
மடித்து கொள்பவர்களா?

தவிர்க்க முடியாத-
காரணத்தால்-
"பிரிந்து"கொள்ள-
அனுமதித்தவனா?

" பிரிவது. தவறென-
சொல்லி கொண்டு-
எரி வாயு அடுப்பை-
வெடிக்க செய்பவர்களா!?

ஆணும் பெண்ணும்-
கற்புடன் - நடங்கள்-என 
அறிவு சொல்பவனா!?

ஆணுக்கு -
கடை சரக்காகவும்-
மாதுக்கு தடை சரக்காகவும்-
மாற்றிகொண்ட -
மனிதர்களா?

பள்ளத்தை சமபடுத்துவது  போல-
ஏழைக்கு தர்மம்-
செய்ய சொன்னவனா?

பிச்சை காரத்தனத்தை-
ஊக்குவிக்கும் என-
தானம் செய்ய-
மறுப்பவர்கலையா?

நல்லது - கேட்டது
அறிந்து கொள்ள-
பகுத்தறிவு கொடுத்தவனா?

அறவே  அறிவை-
பயன்படுத்தாதவர்களையா?

மதுவை தடை-
செய்த இறைவனா?

மதுக்கடைகளை -
திறந்து வைத்து-
நாசம் செய்யும்-
மனிதர்களையா!?

தேவைகளை தன்னிடமே-
கேட்க சொல்லும்-
இறைவனையா!?

"இடைதரகர்களை"-
ஏற்படுத்தி-
ஏமாறும்-
மக்களையா?

யார் மீது-
தப்பு!,

இறைவனா?
மனிதர்களா?

சொல்லுங்கள்-
மனிதர்களே-
சொல்லுங்கள்!

இல்லையென்றால்-
தயவுசெய்து-
சிந்தியுங்கள்!

10 comments:

  1. seenu nalla changes munnadi ezuthiyatum ippo ezuthurathum...

    super aa irukku seenu ..kalkuringaa ...vaazthukkugal

    ReplyDelete
    Replies
    1. kalai;
      ungaludaya muthal varavum-
      urchaaka moottalum-
      ennai melum ezhuthida thoondum!

      nantrikal ungalukku!

      Delete
  2. குற்றம் சிந்திக்காமையே
    குற்றங்களை அழகாய் அடுக்கிச் சென்ற விதமும்
    இறுதி வரியும் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramani ayyaa!

      ungal varavukkum-
      urchaaka moottalukkum-
      mikka nantrikal!

      Delete
  3. சிந்திக்க முயல்கிறோம் . சிறப்பான கேள்விகள் , விடை இல்லா கேள்விகளும் .

    ReplyDelete
    Replies
    1. sasikala;
      ungaludaya karuthukkum-
      varavukkum mikka nantri!

      Delete
  4. நல்ல கவிதை நிறைய அர்த்தம் உடைய கவிதை நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  5. குற்றங்கள் என்று தெரிந்துகொண்டே இன்னும் செய்துகொண்டுதானிருக்கிறோம்.அதற்குள் கட்டுப்பட்டுக்கொண்ட காரணமேதான் இது !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!
      ungal varavukkum
      karuthukkum mikka nantri!

      Delete