Tuesday 6 March 2012

ஆரம்பமும்- முடிவும் !

ஆரம்பித்தேன்-
கண்ணாடியில்-
தலை வாரவும்-
முகம் பார்க்கவும்!

விரும்ப ஆரம்பித்தேன்-
குளிக்கவும்!-
குளிக்கிரவங்களையும்!

நேசிக்க ஆரம்பித்தேன்-
மலரையும்-
மலரின் வாசத்தையும்!

வாசிக்க ஆரம்பித்தேன்-
கவிதைகளையும்-
கண்களின் பார்வைகளையும்!

வாழ ஆசைப்பட்டேன்-
உன்னோடும்!-
நம் காதலோடும்!

ரசிக்க ஆரம்பித்தேன்-
தண்ணி நிறைந்த-
கண்மாயவும்!
வறண்டு பிளந்து போன-
கரம்பையவும்!

உன்னை பார்த்த-
பிறகு!

உன் வட்ட முகத்தை-
கண்ட பிறகு!

விலக ஆரம்பித்தேன்-
உன் நிலை அறிந்ததும்!
உன் குடும்ப விபரம்-
தெரிந்ததும்!

எந்த தகப்பன்தான்-
விரும்புவான்!-
கல்சடைக்கு பொண்ணு-
கொடுக்கவும்!
காசில்லாதவனை-
மருமகன் என்று-
அழைக்கவும்!

செல்ல முடியும் -
கடத்தி கொண்டு-
காதல் வசனம்-
பேசி கொண்டு!

பாழாக்கனுமா?-
உன் தங்கைகளின்-
எதிர்காலத்தையும்-
உன் அண்ணன் முகத்தில்-
கரியையும்!

சந்தோசமானது-
உன் குடும்பம்-
உன் "பிறப்பால்"!

"சங்கட " படனுமா?-
என் "வரவால்"!

எனக்கு ஒன்றும்-
புதிது இல்ல-
பிரிவும்-துயரும்!

அதை நான் -
தரணுமா?-உன்
உறவுகளுக்கும்!

வேதனை தருது!
உன்னை பிரியனுமே-
என்ற நினைவு!

சில மாதமே-
நமது உறவு!

எனக்கே இந்த -
நிலையானது !

உன்னை கண்ணாக-
"பார்த்தவர்களின்"-
நிலை என்னாவது!?

அணு தினமும்-
உன்னை காண-
நினைத்தேன்!

ஒரு இனிய தேன் கூட்டை-
கலைக்க கூடாதுன்னு-
பிரிகிறேன்!

சொல்ல மாட்டேன்-
போய் வருகிறேன்-
என்று!

சொல்லி கொள்கிறேன்-
இனி உன் வாழ்வின்-
குறுக்கே கூட வரமாட்டேன்-
என்று!

6 comments:

  1. கவிதைகள் சும்மா தூள் கிளப்புது...

    ReplyDelete
    Replies
    1. puthiya thentral!

      ungal karuthukkum-
      varavukkum mikka
      nantri!

      Delete
  2. superaa irukku seenu...kalakuringa ponga

    ReplyDelete
    Replies
    1. kalai ;
      mikka nantri!
      ungal varavukkum-
      karuthukkum!

      Delete
  3. ஒரு காதல் கதை.மறக்க நினைத்தே நினைத்துக்கொண்டிருக்கும் காதல் !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!

      ungal oru vari-
      en manathil vali!
      pirathi palikkirathu-
      varavukkum karuthukkum-
      mikka nantri!

      Delete