Wednesday 14 March 2012

எனக்கொரு கவலை இல்லை....

படுத்ததில்லை-
கட்டில் மெத்தையில!

புரண்டதுண்டு-
கழிவுகளுக்கிடையில!

அலப்பறை செய்ததில்ல-
விலையுயர்ந்த-
காலணியோட!

இருக்கிறேன்-
சூடு தழும்புகள் உள்ள - கால்களோட!

படித்து புத்தகங்களை-
கிழித்ததில்ல!

படிக்காததால்-
என்னை -
அடிக்காத-
ஆசிரியர் இல்ல!

ஒத்தனம் கொடுத்ததில்லை-
பூக்களின் இதழ்கள்!

பதம் பார்த்து -
இருக்கிறது- 
என்னை-
தீ நாக்குகள்!

பட்டமும் பதக்கமும்-
பெற்றதில்ல!

பட்ட பாட வெளிய-
சொல்ல வெட்கமும்-
இல்ல!

உச்சி முகர்ந்து-
வளர்த்த உறவுகள்-
நிறைய இல்ல!

பிச்சி எறிந்த - 
வார்த்தைகள்-
கொஞ்சம் இல்ல!

என்னை உரசி -
போனதில்லை-
மின்மினிகள்!

"காயத்தை" தராமல்-
கடக்கவில்லை-
"கண்மணிகள்"!

வெற்றி வாகை-
சூடியதில்லை!

தோல்விகள் அதற்கு-
வாய்ப்பு வழங்க வில்ல!

ஆதலால் தான்-

இருப்பதை நினைத்து-
" ஆட"விரும்பல!

இல்லாததை நினைத்து-
"அடங்கி" போகவும்-
விரும்பல!

8 comments:

  1. Replies
    1. seythali;
      ungaludaya varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  2. இருப்பதை நினைத்து-
    " ஆட"விரும்பல!

    இல்லாததை நினைத்து-
    "அடங்கி" போகவும்-
    விரும்பல!
    யதார்த்தம் .

    ReplyDelete
    Replies
    1. sasikala;

      ungal varavukku
      karuthukku
      mikka nantri!

      Delete
  3. அட சூப்பர்...நண்பா...

    ReplyDelete
  4. ஆணவமும் நான் என்ற அகம்பாவமும் இல்லாதவரை எல்லாம் இருந்தாலும் எதுவுமே இல்லைதான் !

    ReplyDelete
    Replies
    1. Hema!
      ungal varavukkum-
      karuthukkum-
      mikka nantri!

      Delete