Thursday 29 March 2012

எழுத்து!

குழந்தை -
எழுத்து-கண்ணுக்கு
தெரியும்-
கிறுக்கலாக!

உள்ளத்திற்கோ-
இனிக்கும்-
கவிதைகளாக!

கிழித்து போட்ட-
காகிதமானாலும்!

எழுத்துக்கள்-
கோழி கிளைத்து-
போட்ட
மண்ணாக தெரிந்தாலும்!

ரசனை உள்ளவனுக்கோ-
அதுவே-
ஓவியங்களாகும்!
-----------------------
பரிமாற்ற பட்டது-
காதல் கடிதங்கள்-

நீடித்தது-
காகிதமும்-
எழுத்தும் போல!

கேட்டு பெறுவது-
கை பேசி எண்களை-
தொடர்புகளோ-
நம்ம ஊரும்-
மின்சாரமும் போல!
-----------------------------
எழுதுவது-
இன்று தெரியலாம்-
சாதாரணமாக!

நாளை -
எழுத்தே மாறும்-
வரலாறாக!
------------------
நேற்று-
கிறுக்கன்!

இன்று-
ஞான கிறுக்கன்-

பாரதி!

இன்று-
நம் எழுத்து-
"வெட்டி"!

நாளை-
யாருக்காவது-
கொடுக்கும்-
புத்தி!
-----------------
எழுதுபவனை-
திருத்தணும்-
அவனின் எழுத்து!

நிச்சயம்-
சமூகத்தை மாத்தும்-
அதே எழுத்து!
------------------------
சிந்திப்பதால்-
எழுத்தா?

எழுதுவதால்-
சிந்தனையா?
-----------------
அடக்க முடியாத-
ஆத்திரம் செய்வதை-
விட!

ஆக்கபூர்வமான-
எழுத்து செய்து விடும்-
அதை விட!
------------------------
எழுத்துக்கள்-
அமைய வேண்டும்-
சமூக பொறுப்புடன்!

சமூகம் எழுத்தாளனை-
பார்க்குமா?-
பொறுப்புடன்!
---------------------
தோண்டும்போதுதான்-
ஊற்றுகள்-
தெரிகிறது!

எழுதிடும்போதுதான்-
சிந்தனை துளிர்கிறது!
----------------------------
இனிப்பும்-
விஷமும் -
உண்டு-தேனில்!

சிறப்பும்-
சீரழிவும் -
உண்டு-
எழுத்தில்!
----------------
எழுதுகோல்-
தன்னில் உள்ள -
வண்ணத்தை-
வெளியேற்றுகிறது!

எழுத்தாளன்-
தனது எண்ணத்தை-
வெளியேற்றுவது!
--------------------
அழிந்து வருது-
கையெழுத்து முறை!

"படைத்தவன்"-
மறைத்து வைத்து கொண்டான்-
தலையெழுத்தின்-
நிலை!
--------------------------

11 comments:

  1. எழுத்தைப் பற்றி மிக நல்ல கவிதைகள் சீனி

    ReplyDelete
    Replies
    1. seythali;

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  2. மிக அருமையான கவிதை நண்பா.........

    ReplyDelete
    Replies
    1. sittu kuruvi!
      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  3. அவரவர் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் .

    ReplyDelete
    Replies
    1. sasikala;
      ungal varavukkum-
      karuthukkum-
      mikka nantri!

      Delete
  4. //எழுதுவது-
    இன்று தெரியலாம்-
    சாதாரணமாக!

    நாளை -
    எழுத்தே மாறும்-
    வரலாறாக!//
    அருமை1

    ReplyDelete
    Replies
    1. ayya!

      ungal karuthukkum-
      varavukkum mikka nantri !

      Delete
  5. எழுத்தால் புகழும் இருக்கு.அதேசமயம் வீழ்ச்சியும் இருக்கு !

    ReplyDelete
    Replies
    1. hemaa!

      ungal karuthu-
      unmaithaan ezhuthupavar
      puriyanum!

      ungal varavukku mikka nantri!

      Delete