Sunday 11 March 2012

பொழுதடையும் நேரத்திலே!

தரும் -
சிலருக்கு-
"மயக்கத்தை"!

பலருக்கு-
"ஏக்கத்தை"!

சில மனங்கள்-"
"தணியும்"!

பல மனங்கள்!-
"தாகிக்கும்!"
-----------------------
காதலியின் பார்வை-
செய்யும்!

பித்தம் பிடிக்கவும்!
பிடித்து தள்ளவும்!
------------------------

மல்லிகை வாசம்-
வாசமும் தரும்!
பொசுக்கவும் செய்யும்!
------------------------------

மாணவர்கள்-
"முகமூடியை" கழட்டிடும்-
நேரம்!

வேலைக்கு போவோர்-
"அங்கே" "வாங்கி கட்டியதை-"
வீட்டுல கொட்டி தீர்க்கும்-
நேரம்!

சிலர் ஆசையாக-
மனைக்கு -
போவார்கள்!

பலர் வீட்டுக்கு போகனுமா?-
என - நெளிவார்கள்!
-----------------------------

அடுப்படியில் கிடந்தது-
கரியானவள் -தலை வாரும்
நேரம்!

கணவன் -
"குடித்து விட்டு -
வந்து-"வீச" வைக்கும்-
நேரம்!
-----------------------
வாலை சுருட்டி-
கிடக்கும்- சபலம்!

ஊளையிட -
ஆரம்பிக்கும்- நேரம்!

சபலத்துடன்-
குடியும் கூட்டு-
வைத்தால் -"இரை"தேடும்
தருணம்!

"தணித்திட"-
பணங்காசை செலவு-
செய்யும்!

பலாத்காரமும்-
செய்ய துணியும்!
-------------------------
கூடையில்-
பூக்கள் !
சிரித்து இருக்கும்!

விற்பவர் -
முகம் பசியில்-
வாடி இருக்கும்!

தொளிக்க பட்ட-
தண்ணீர்-பூக்களை
குளிர்விக்கும்!

துளியாக வடிந்து-
பாதையை-
ஈரமாக்கும்!

விக்காத பூக்கள்-
வியாபாரியின் - மனதை
ரணமாக்கும்!
-----------------------------
மறையும் சூரியன்-
சில மணிக்கு பின்-
வெளிச்சம் -தரும்!

இருளில் கிடக்கும்-
நம் மக்களின்-வாழ்வுக்கு
எப்போது ?-
வெளிச்சம் வரும்!
--------------------------

8 comments:

  1. நேரங்களைக் கணக்கெடுத்திருக்கிறீர்கள் சீனி.நேரம் நலிந்தால் வாழ்வும் வலிக்கும்.அதிஷ்டமிருந்தால் நேரங்களும் இனிக்கும் !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!
      ungal nerangal inithida-
      vaazhthukiren!

      Delete
  2. பொழுதடையும் நேரத்தை கண் முன்
    காட்சிகளாக நிறுத்திப் போனது
    தங்கள் பதிவு
    முத்தாய்ப்பு மிக மிக அருமை.
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Ramani ayya !
    ungal varavukku -
    nantrikal ayya!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நண்பா கவிதை அருமையாகவுள்ளது

    ReplyDelete
    Replies
    1. sittu kuruvi!

      ungal varavukku-
      mikka nantri!
      karuthukkum!

      Delete
  5. seenu nalla improvement therrythu munnadi ezuthinathukkum ippo ezuthinathukkum

    ReplyDelete
    Replies
    1. kalai!

      appdiyaa..!

      neenga sonna sarithaan!
      rompa nantri!

      Delete