Sunday 20 April 2014

காலத்தின் பேனா...!! {1200 வது பதிவு}


பாறையிடுக்கினுள்
பறவைகளின் எச்சங்களின் வழியாக
விதைபடும் விதைகளைப்போல்!

விலாசம் தேடியலைகையில்
விலாசத்திற்கு வழிக்காட்டும்
விரல்களைப்போல்!

குருதி தேவைப்படும்போது
ஓடி வந்து உதவிடும் முகமறியா உறவுகளைப்போல்!

எங்கு தொடங்கி
எங்கு சேர்ந்தது என அறிய முடியாத
வட்டத்தைப்போல்!

நானும்
என் எழுத்தும்!

எழுத்தை நோக்கி
நான் நடந்தேனா..!?

என்னை நோக்கி
எழுத்து வந்தனவா..!?

அறிய முனையவில்லை!

காரணம்
காலம் தன்னை பதிந்துக்கொள்ள
பேனாக்களை தன் வசமாக்கியுள்ளது!

அப்பேனாக்களில்
என் பேனாவும் இருக்கனும்
எனும் ஆவலில்
எண்ணங்கள் எழுத்தாகிறது!

   

5 comments:

  1. 1200 வது பதிவு - மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. 1200 ஆ .. அடேயப்பா.. வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்! இன்னும் பல்லாயிரம் பதிவுகள் பெருகட்டும்!

    ReplyDelete
  5. 1200 வது பதிவு. மனம் நிறைந்த வாழ்த்துகள் சீனி.

    ReplyDelete