Monday 28 April 2014

தோப்பு...!!

சர சரக்குது
தென்னங்கீத்து!

ஏதோ ஒரு மூலயில
பனங்கா விழுற சத்தம்!

தத்தி தத்தி நடக்குது
மைனா கூட்டம்!

வாலால மண்ண தட்டிட்டு
அணில்பிள்ள எடுக்குது
ஓட்டம்!

ஆழக்கெணத்துல சலப் சலப் னு
தண்ணி மோதுது!

பம்பு செட்டு அறயில
கீச் கீச் னு
குருவி குஞ்சுக சத்தம் எழுப்புது!

கெடக்குறேன்!
கயித்து கட்டல்ல நானும்!

பார்வயிக்கு நேரா வானம்!

என்ன சுத்தி
இத்தன சத்தம்!

எஞ்செவியில கேட்குது
ஒரே சத்தம்!

சல சலன்னு
அவ பேசிப்போன வார்த்த!

உரிச்சி எடுக்குது
எம்மனச!

கண்கள மூடிக்கிறேன்!

எச்சில விழுங்குறேன்!

அந்த நெனவு
கொல்லுதா..!?

என்னை தழுவுதா..!?

எனக்கு மட்டுமே தெரியும்!

என்னை தழுவிப்போவும் காத்துக்கும் புரியும்!

     

1 comment:

  1. அருமை.... அவளின் நினைவுகள் என்றும் சுகமாக.....

    ReplyDelete