Sunday 1 November 2015

நிராசை...!!(குட்டிக்கதை)

   
  "எத்தன தடவ சொன்னேன்..?நான்
அங்கேயே இருந்துக்குறேன்..ஏதாவது வேல செஞ்சிக்கிட்டு இருந்துக்குறேன் னு,யார் கேட்டீங்க..மலேசியாப் பொண்ணு னு கட்டி வச்சீக..ஒங்களுக்கு எந்தம்பி மலேசியாவுல இருக்கான்,எம்மவன் மலேசியாவுல இருக்கான் னு "பவுசி" பண்ணனும்,அப்புறம் கைலி தாவாணி கொடுத்து விட ,நான் இங்கே இருக்கனும்.ஒம்மவன் இங்கே வர விசா ஏற்பாடு செய்ய ஆளு வேணும்,இப்படி ஒங்க ஆசைக்கெல்லாம் என்னை இங்கே தள்ளி விட்டீங்க.....என் ஆசையில மண்ணள்ளி போட்டுட்டு.இப்ப என்ன ஊருக்கு வா ,ஊருக்கு வா னு அழுவுறீங்க....என்னால ஒடனே கெளம்பி வர முடியாது....உம்மா "மவுத்தா" போனா நான் என்ன செய்ய..!? தூக்கி அடக்கம் பண்ணுங்க...நான் வர முடியாது"என ஊரிலிருந்து,தன் தாய் மரணச் செய்தியைச் சொன்ன தன் அக்காவைத் திட்டு விட்டு ,

"அபாங்.., மோ ஆப்பா...!? என தன் மாமனார் உணவகத்தில் வேலையைத் தொடர்ந்தான் மலேசியாவில்யூசூப்.

        

2 comments:

  1. நிதர்சனம்! சொன்னது கதை!

    ReplyDelete
  2. நினைத்தவுடன் வர இயலாத தொலைவில் இருக்கும் கோபம்....

    ReplyDelete