Monday 24 December 2012

முகலாயர்களே....(16)

அடி!-
அடி!-
அடி!

அடிக்கமாட்டேன்-
மனைவியை -என
சொல்லும்வரை-
அடி!

கொடுத்தது-
தந்தை-
பகதூர்ஷா!

வாங்கி-
கட்டியது-
ஒன்பதாவது-
மகன்-
மிர்சா!

எண்பதாயிரம்-
சிப்பாய்கள்-
சுதந்திரத்திற்காக-
குழுமிய -
தருணம்!

தியாக திருநாள்-(ஹஜ் பெருநாள்)
வரும் காலம்!

இரு சமூகங்களுக்கிடையே-
ஒரு-
மன சஞ்சலம்!

மாடு பலியிட-
போவதாகவும்!

அதை-
மாற்று மத சகோதரர்கள்-
வெறுப்பதாகவும்!

அறிந்தார்-
மன்னர்!

உத்தரவை-
பிறப்பித்தார்!

யாரும்-
மாடு பலியிட(குர்பானி)-
கூடாதென!

மீறினால்-
பீரங்கியில் வைத்து-
சுட்டுவிடுவேன்-
என!

அடி-
கொடுத்தார்-
பெண்ணுக்கு-
அடி-
விழுந்ததால்!

மனமாச்சர்யம்-
இல்லாமல் முடிவெடுத்தார்-
சமூகங்கள்-
பிளக்குமானால்!

வாள் எடுத்தார்-
பிறந்த மண்ணுக்கு-
"ஒன்றென்றால்"!

இம்மன்னரையும்-
மறைக்கலாமோ-
மத சாயத்தால்!!?

இன்று நாம்-
மறந்தோம்-
உயிர் தியாகிகளை!

நம்பி-
ஏமாறுகிறோம்-
போலிகளை!

அதில்-
ஒன்றானது!

இனி-
நான்-
சொல்லபோவது!

தேசம்-
நிறைந்துள்ளதாம்-
ஊழலாக!

எழுந்தால்-
ஒருவர்-
புயலாக!

ஆனார்-
அனைத்து -
பத்திரிக்கையிலும்-
தலைப்பு-
செய்திகளாக!

இப்போது-
ஆகி விட்டார்-
காணாமல்-
போன-
ஆளாக!!

நமக்கெல்லாம்-
தெரியும்-
அந்த-
"டெல்லி வாலா"!

போராட்டம்-
காண்கிறார்-
தனி ஒரு-
ஆளா!

உண்ணாவிரதம்-
இருக்கிறார்-
பன்னிரண்டு-
வருடங்களா!

மூக்கின் வழி-
செல்வதுதான்-
உடலுக்கு-
ஆகிறது-
ஆகாரங்களா!

ஒரே-
கோரிக்கை-
சிறப்பு அதிகார சட்டத்தை-
மாற்ற மாட்டார்களா!?

நம்மில்-
எத்தனை பேர்-
அறிவோம்-
இச்சகோதரி-
பெயர்-
சர்மிளா......!!!

(தொடரும்.....)

(குறிப்பு- வரலாற்று ஆதாரங்களை-
தொடரின் கடைசியில் குறிப்பிடுகிறேன்)

4 comments:

  1. இன்று நாம்-மறந்தோம்-உயிர் தியாகிகளை!

    நம்பி-ஏமாறுகிறோம்-போலிகளை!

    என்றென்றும் அப்படித்தானே ..!

    ReplyDelete
  2. வரிகளை படிக்க படிக்க சுருக்....ஊசியால் குத்துவது போன்று

    ReplyDelete
    Replies
    1. muththarasu!

      appadiyaa...!?

      mikka nantri sako!

      karuththittamaikku..

      Delete