Thursday 10 July 2014

குர்ஆனைப்பற்றிய கவிதைகள்..!! (5)

எத்தனையோ புத்தகங்கள்
உங்கள் மனதை தொட்டு
இருக்கலாம் !

குர்ஆனைப் படித்துப்பாருங்கள்
உங்கள் ஆழ்மனதை தட்டுவதை
உணரலாம் !
-----------------------------
உறவுகளால்
உதறி எறியப்பட்டவரா..!?
நீங்கள்.!?

இறைமறையை
படித்துப்பாருங்கள்!

வெறுத்தவர்களையும்
நேசிக்க ஆரம்பித்து விடுவீர்கள் !
--------------------------------
குர்ஆன் !
கோழைக்குள்
வீரத்தை விதைக்கும்!

அவ்வீரத்திற்குள்ளோ
இரக்கமே மிகைத்திருக்கும்!
-----------------------------
இறைவசனங்கள்!
மூர்க்கமானவர்களையும்
முரடர்களையும்
மனிதர்களாக மாற்றி இருக்கு!

அவ்வரிசையில்
நானும் ஒருவன் என
சொல்லிட
எனக்கென்ன தயக்கம் இருக்கு..!?
-------------------------------

       

1 comment: