Monday 15 October 2012

நான் என்ன செய்வேன்....!!? (5)

 விடியாமல்-
இருக்காது-
இரவு!

நிமிருமா!?-
குடியில்-
"கவுந்திட்டவர்களின்"-
வாழ்வு!

இப்பொழுது-
பார்ப்போம்-
இவர்களின்-
வீட்டை!

படுத்து கொண்டு-
பார்ப்போமேயானால்-
முகட்டை!

இரவில்-
நிலவு-
நட்சத்திரங்களாகவும்!
பகலில்-
சூரிய வெளிச்சம்-
வீட்டினுள்-
நட்சத்திரங்களாகவும்-
தெரியும்-
அவ்வளவு-
ஓட்டை!

புகைப்பதால்-
இதயத்தில்-
ஓட்டை!

குடிப்பதால்-
குடலில்-
ஓட்டை!

"விற்கவும்"-
அனுமதித்து விட்டு-
"வேண்டாம்"-என
விழிப்புணர்வு-
நடத்துவது-
என்ன சொல்ல-
இந்த நிலைபாட்டை!?

கதிரவன்-
கக்கியது-
சூட்டை!

கலைத்தது-
இனியவனின்-
தூக்கத்தை!

"ஆட்டம்"போட்டவர்-
இன்னும்-
எழவில்லை!

"நடந்தவை"பற்றி-
தாய் முகத்தில்!-
சஞ்சலமே இல்லை!

"காலை கடன்"-
முடிக்க போகிற-
தெருக்காரர்கள்!

இவனை-
கடன் கடன்காரனை-
போல-
பார்த்தார்கள்!

புரிந்து-
கொண்டான்-
அப்பனின்-
செய்கைகளால்-
இந்த-
பார்வைகள்!

பார்த்தவர்கள்-
எப்படி பட்டவர்கள்!?

அவன் அப்பனை-
விட-
"ஒரு இரு வார்த்தை"-
குறைவாக -
"பேசி இருப்பார்கள்"!

எல்லாம்-
ஒரே குட்டையில்-
ஊறிய-
மட்டைகள்!

வழக்கம்போல்-
கிளம்பினான்-
பள்ளி நோக்கி!

காலம் -
கழிகிறது-
நம்மை-
தாங்கி!

நடுநிலை பள்ளி!
உயர்நிலை பள்ளி!
மேல்நிலை பள்ளி!

இடைப்பட்ட-
காலத்தில்தான்-
கனன்று கொண்டிருக்கும்-
இளமை எனும்-
நெருப்பு கொள்ளி!

(தொடரும்...)


19 comments:

  1. காலம் -
    கழிகிறது-
    நம்மை-
    தாங்கி!

    உண்மை தாங்க தொடருங்கள்.

    ReplyDelete
  2. நல்லா இருக்கு...இன்னும் தொடருங்கள்...

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. நன்றாக இருக்கிறது தொடர்ங்கள்

    ReplyDelete
  4. ///"விற்கவும்"-
    அனுமதித்து விட்டு-
    "வேண்டாம்"-என
    விழிப்புணர்வு-
    நடத்துவது-
    என்ன சொல்ல-///

    இதை காரியவாத சந்தர்ப்பவாதிகள் என்று சொல்லலாமே???
    சும்மா ஜாலிக்கு
    கவிதை அருமை சகோ

    ReplyDelete
    Replies
    1. hyder ali sako!

      varavukkum-
      "jollikkum"-
      mikka
      nantri!

      Delete
  5. விறுவிறுப்பாக இருக்கிறது.
    தொடருங்கள்.

    ReplyDelete
  6. கவிதையாய் ஒரு கதை
    சீனி விதைக்கும் விதை
    தொடருங்கள் அதை..

    ReplyDelete
    Replies
    1. asarath!

      ungal kavithiyaana-
      vimarsanathirkku-
      mikka nantri!

      Delete
  7. தொடரட்டும் க(வி)தை

    ReplyDelete
  8. இனியவனின் எதிர்காலம்? என்று சொல்லி ஒரு கேள்விக்குறியோடு முடிந்தது போல் இருக்கிறது அண்ணா! அதையே எதிர்பார்த்து தொடர்கிறேன்!

    ReplyDelete