Saturday 6 October 2012

காந்தியும்-துளி நம்பிக்கையும்..!!

மகாத்மாவே!

அன்று-
குஜராத் என்றால்-
காந்தி!

இன்று-
குஜராத் என்றால்-
கலவர தீ!

உனது அடையாளம்-
மூக்கு கண்ணாடி!
ஒரு தடி!
போர்த்திய துணி!

இலவசமாக-
ரத்தகரைகள்-
அடையாளமிட்டான்-
கோட்சே!

இருந்தும்-
தாகம் அடங்கவில்லை!-
நீ பிறந்த மண்ணையும்-
ரத்தம் ஆக்கினார்கள்-
அவனின் வாரிசுகளே!

நீ!
பல கோரிக்கைக்கும்-
போராட ஒரே வழி-
அகிம்சை!

கூடன்குள மக்கள்-
ஒரே கோரிக்கை-
ஒரே வழி-
அதே அகிம்சை!

உன்னை -
இம்சித்தவர்கள்-
அந்நியர்கள்!

இம்மக்களை-
துன்புறுத்துவதோ
இந்தியர்கள்!

உனது வழியை-
பின்பற்றும்-
இம்மக்களின்-
குரலை!

கேட்க ஒரு-
நாதி இல்ல!

உன் படங்களை-
"வாக்குக்கு" பயன்படுத்திட-
குறைச்சல் இல்ல!!

மது விலக்கு-
நீ!
போதித்தாய்!

இன்னும் -
நீ!-
வாழ்திருந்தால்!-
"விளங்கும் "-என
வருந்திருப்பாய்!

பெத்தவங்களையே-
ஏதோ "இல்லத்துல"-
தள்ளுறாங்க!

"தினங்கள்"மட்டும்-
யோக்கியமா!?-
கொண்டாடுவாங்க!!

தாயிக்கும்-
தந்தைக்கும்-
"குறிப்பிட்ட" தினத்தன்று-
பூங்கொத்து!

இச்செயல் சமூகத்தின்-
காதில்-
பூவை-
குத்தும்!

அப்பனை-
ஆத்தாளை-
தெருவில்-
விட்டவர்கள்!

"தாத்தா"-
உன் போதனைகளை-
யோசிப்பார்கள்!!?

உன்னை போல-
எத்தனையோ-
உள்ளங்கள்!

நாட்டுக்காக-
"புதைந்தார்கள் "!

தேசம் என்பதை-
நேசித்தார்கள்!

தியாகிகளே!
கவலை வேண்டாம்!
கலங்க வேண்டாம்!

நாளையே -
மாறும் -
என் தேசம்-என்று
நம்பிக்கை இல்லை!

என்றாவது -
ஒரு நாள்-
மாறும்-என்ற
நம்பிக்கையை -
இழக்கவில்லை!

ஏனென்றால்-
தியாகங்களின்-
உணர்வுகள்-
உயிர்பிக்காமல்-
இருந்ததில்லை!!






23 comments:

  1. நாளையே -
    மாறும் -
    என் தேசம்-என்று
    நம்பிக்கை இல்லை!

    என்றாவது -
    ஒரு நாள்-
    மாறும்-என்ற
    நம்பிக்கையை -
    இழக்கவில்லை!

    அருமையான வரிகள் நண்பரே.

    ReplyDelete
  2. seeni kavithai against to islam

    ReplyDelete
  3. சரியா சொன்னீங்க, மாறும் நம்பிக்கையுடன்...

    ReplyDelete
  4. தோழர் சீனியின் கவிதைகள் நிறையவே மேருகு கூடி இருக்கிறது. நன்றி உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சிறிய வரிகளில் அருமையாக சொல்லி இருக்கீங்கள்.

    ReplyDelete
  6. /// தியாகங்களின்-
    உணர்வுகள்-
    உயிர்பிக்காமல்-
    இருந்ததில்லை!! ///

    சிறப்பான கவிதை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. சீனி..
    சும்மா கலங்குறீங்க போங்க..

    ReplyDelete
  8. மன்னிக்க வேண்டும் சகோ .இந்த சகோதரிக்கு ஆக்கம்
    எழுதுவதற்கே நேரப் பற்றாக் குறை இருப்பதனால் இப்படி
    அருமையான ஆக்கங்களைக் கண்டு மகிழ்ந்து கருதிட
    முடியாமல் போய் விடுகின்றது .தங்கள் கவிதையின்
    சிறப்பினைக் கண்டு பெருமை கொள்கின்றேன் .காரணம்
    அத்தனை தத்துருபமாக உணர்வினை சித்தரித்துள்ளீர்கள் .
    வாழ்த்துக்கள் மென் மேலும் இனிய கவிதை எழுதும்
    வளம் பெருகட்டும் .பிற தளங்களிலும் பகிர்ந்துகொண்டு
    தங்கள் தளத்தினை மேம்படுத்துங்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
    தாங்கள் கேட்டதுபோல் கவிஞர் ஐயா பாரதிதாசன் அவர்களுக்கு
    கருதிடும் வாய்ப்புக் கிட்டி விட்டது .மகிழ்வுடன் உங்கள்
    கருத்துக்களையும் இட்டு இத் தளம் மேலும் பிரபலம் அடைய
    ஒத்துழைப்பு வழங்குங்கள் சகோ .

    ReplyDelete
    Replies
    1. ampaaladiyaal!

      ungal varukaikkum karuthukkum-
      mikka nantri!

      ayya !
      thalam
      sentren!
      karuthitten!

      thakavalukku mikka nantri

      Delete
  9. சமூகத்தின்-
    காதில்-
    பூவை-
    குத்தும்!

    நிலை மாற் பிரார்த்திப்போம்..

    ReplyDelete
    Replies
    1. rajeswari!

      mikka nantri!

      nichayamaaka....

      Delete
  10. நல்லா இருக்கு சகோ...குறிப்பா பெத்தவங்களையே-
    ஏதோ "இல்லத்துல"-
    தள்ளுறாங்க!

    "தினங்கள்"மட்டும்-
    யோக்கியமா!?-
    கொண்டாடுவாங்க!!

    தாயிக்கும்-
    தந்தைக்கும்-
    "குறிப்பிட்ட" தினத்தன்று-
    பூங்கொத்து!

    இச்செயல் சமூகத்தின்-
    காதில்-
    பூவை-
    குத்தும்!

    வாழ்த்துக்கள்..தொடருங்கள்.

    ReplyDelete
  11. அண்ணா தங்களோடு ஒரு விருதினை பகிர்ந்துள்ளேன்! அதை ஏற்றுக்கொள்ள தங்களை எனது வலைப்பூவிற்கு அழைக்கிறேன்!
    http://dewdropsofdreams.blogspot.in/2012/10/2.html

    ReplyDelete
  12. yuvaraani sako!

    mikka nantri!

    ReplyDelete
  13. காலமெல்லாம்-
    நினைவுகளில்-
    இனிப்பை தடவிடும்-
    பள்ளி காலம்!

    நல்ல கவிதை நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. ayya munaivare!

      ungal laruthukku mikka nantri!

      kavithai maari pinnoottam-
      pottudeenga...

      Delete