Thursday 4 October 2012

வாழ்வதா முக்கியம்....!!??

  பிறப்பின் -
நோக்கம் -
தெரிந்தவர்கள்!

இறந்தும்-
மனித மனங்களில்-
வாழ்கிறார்கள்!

நோக்கமே-
இல்லாமல்-
வாழ்பவர்கள்!

வாழும் போதே-
இறந்தவர்கள்!

பல ஆயிரம்-
உயிர்கள் -
அழிந்தால்!

இயற்கை -
சீற்றத்தால்-
மடிந்தால்!

கதறும்-
உலகின் உயிர்கள்!

ஒரு உண்மை-
ஆத்மா -
மரித்தால்!

பல கோடி -
கண்கள்-
குளமாகும்-
கண்ணீரால்!

சர்வாதிகாரர்கள்!
சாகடிப்பவர்கள்!
சாதித்தவர்கள்!

கொடுங்கோலர்கள்!
கொடுமைக்காரர்கள்!
குணமானவர்கள்!

ஆயுத தாங்கிகள்!
ஆயுதத்தால் தாக்குண்டவர்கள்!

அரவணைப்பவர்கள்!
அழுபவர்கள்!
அழ வைத்தவர்கள்!

"வந்து போனா "-
மனிதர்கள் தான்-
எத்தனை!?

நாம் தேர்ந்தெடுத்து-
செல்லும் பாதைதான்-
குறிப்பது-
எதனை!?

ஒரு கவள-
உணவிற்கு!

ஓராயிரம் -
கைகளின்-
உழைப்பிற்கு!

நாம் -
உதவி உள்ளோமா-
ஒரு உயிருக்கு!?

படைப்புகளெல்லாம்-
படைப்புகளில்-
சிறந்த மனிதனுக்கு-
உதவுகிறது!

மனிதனுக்கு-
மனிதன் உதவுவதில்-
என்ன குறைந்திட-
போகிறது!?

எவ்வளவு காலம்-
வாழ்ந்தோம்-என்பதா
முக்கியம்!?

எப்படி வாழ்கிறோம்-என
எண்ணுவது-
மிக அவசியம்!


15 comments:

  1. /// எவ்வளவு காலம்-
    வாழ்ந்தோம்-என்பதா
    முக்கியம்!?

    எப்படி வாழ்கிறோம்-என
    எண்ணுவது-
    மிக அவசியம்! ///

    அருமையான கருத்துக்கள்...

    ReplyDelete
  2. இறந்தும்-
    மனித மனங்களில்-
    வாழ்கிறார்கள்!

    உண்மை தாங்க நாமும் முயற்சிப்போம்.

    ReplyDelete
    Replies
    1. sasi sako!

      nichayamaaka ....

      mikka nantri!

      Delete
  3. மிகவும் அருமையான கருத்துகள்...பகிர்வுக்கு நன்றி...

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  4. சரியாகச் சொன்னீர்கள்
    மனிதனுக்கு மனிதன் உதவுவதில் ஏனிந்த பின்வாங்கல்

    ReplyDelete
  5. எப்படி வாழ வேண்டுமென்று
    அருமையாகக் கூறியிருக்கிறீர்கள்.
    அருமையான பகிர்வு.

    ReplyDelete
  6. //மனிதனுக்கு-
    மனிதன் உதவுவதில்-
    என்ன குறைந்திட-
    போகிறது!?//

    வாழும் காலம் கொஞ்சம் தான்,

    ReplyDelete
  7. மிகவும் கருத்துச்சுவையும் மனித நேயத்தின் சிறப்பையும் கூறி முடித்த அருமைக்கவிதை சகோ!

    ReplyDelete
  8. கணனியில் இருப்பது குறைவு எப்போதும் கைபேசித்தான் அதிக இணைய நெருக்கம் சீனித்தோழன் போல எனக்கும் நேரம் கிடைக்கும் போது கருத்தோடு வருவேன் சகோ!

    ReplyDelete