Thursday 30 June 2016

சீனி மரைக்கார்...!! (சிறுகதை) 6


       ஊரு வந்த சீனி மரைக்காருக்கு,தன் தாய் இறந்தச் செய்தி வேதனைத் தந்தாலும்,தான் வருவதற்கு முன்னே,அடக்கம் செய்து விட்டார்கள் என அறிந்ததும்,கோபத்தின் உச்சத்திற்கே சென்றார்.வீட்டில் இருந்தவற்றை அடித்து நொருக்கியவர்,இன்னும் வெறியேற்ற மதுவை நாடினார்.


      போதை தலைக்கேற ,ஊர் முக்கியஸ்தர்களை திட்ட ஆரம்பித்தார்.அது இன்னும் வம்பை விலைக் கொடுத்து வாங்கியது.மற்றவர்களையும் அச்செயல் சூடேற்றியது.மறு நாள் பஞ்சாயம் என ஊருக்குள் பேச்சாக இருந்தது.

      விடிந்ததும் ஆள் வந்து சொல்லிப் போனார்."இன்னைக்கு பஞ்சாயம் வச்சிருக்காங்க..சீனி மரைக்காரை வரச் சொன்னாக"என்று தகவலை ,பாத்திமாவிடம் சொல்லிச் சென்றார்.நேரம் கடந்தது எல்லோரும் பஞ்சாயத்திற்கு வந்து விட்டார்கள்.சீனி மரைக்காரும் பஞ்சாயத்தில் உட்கார்ந்து இருக்கிறார்.

   "ஏம்பா...சீனி ...நீ எதுக்கு ஊர்ல உள்ளவங்கள பேசுனே...."என வைப்பத்தான் அப்பா ஆரம்பித்தார்.

       (தொடரும்)

    

2 comments:

  1. அருமையான கதை

    கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    ReplyDelete