Tuesday 28 June 2016

சீனி மரைக்கார்.!(சிறுகதை) 5


       மரியம்பு மரணச் செய்தியை சீனியிடம் சொல்ல,ராமேஸ்வரத்திற்கு ஆள் அனுப்பினார்கள் .அன்றைய காலகட்டத்தில் கைப்பேசியெல்லாம் இல்லை.மற்ற வேளைகளை ஜமாத்தார்கள் பார்த்தார்கள்.சட்டம் வாங்க,ஓலைப்பாய் வாங்க ,குழித்தோண்ட ,என அடக்கம் பண்ணுவதற்கான வேலை நடந்தது.தகவல் சொல்ல சென்றவன் ,வந்து சொன்னான்.

   "அவரு கடலுக்கு போயிட்டாகளாம்,எப்ப வருவாகனு தெரியலயாம்,விசயத்த சொல்லிட்டு வந்துருக்கேன்...!கரைக்கு வந்தா சொல்ல சொல்லிட்டு..!! என சொல்லி முடித்தான்.

பெரியவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.

     "சரி...அவன் எப்ப வாரான்னு தெரியல...அது வரைக்கும் "பாடி"த்தாங்கது....என்ன செய்யலாம்...!?

    "நாம "அடக்கிட்டா" சீனி கிட்ட யாரு பதில் சொல்லுறது...அவன் ஒரு "கிறுக்குப்பய",வம்பு பண்ணுவாங்க..."

    "அதுக்காக ,பொணத்த நாற வைக்கவா முடியும்...!?என பேசிக் கொண்டேப் போய் முடிவுக்கு வந்தார்கள் அடக்கம் செய்திட.பரக்கத்துல்லா மற்ற வேலைகளைப் பார்த்தான்.எல்லோரும் சேர்ந்து மரியம்புவை அடக்கம் செய்து விட்டார்கள்.

     அடக்கம் செய்த மறுநாள் ,கரைக்கு வந்த சீனியிடம் தன் தாய் இறப்புச் செய்தியைச் சொன்னார்கள்.ஊருக்கு கிளம்பினார்.பேருந்து பயணத்தில் தன் தாயின் நினைவுகள் ,இதுவரைக்கும் செய்யாத சித்ரவதை இப்பொழுது செய்தது.தன்னையறியாமலே கண்ணீர் வடித்துக் கொண்டும்,அடக்கம் செய்ததுத் தெரியாமலும் ,ஊருக்கு வந்துக் கொண்டிருந்தார் சீனி மரைக்கார்.

 (தொடரும்...)


1 comment:

  1. அடடா... என்னவொரு சோகம். தாயைக் கடைசியாக ஒரு முறை பார்க்க முடியாமல் போயிற்றே....

    ReplyDelete