Saturday 18 June 2016

சீனி மரைக்கார் ..!! (சிறுகதை) (1)


         முன்னொரு காலத்தில் ஒடைமரங்கள் அடர்த்திருந்த காடு அது.தற்போது கொஞ்சம் கூடுதலாகவே வழுக்கை விழுந்திருந்தது,அந்தக் காட்டிற்கு.ஆனாலும் காடு என்ற பெயரை மட்டும் இழக்காமல் இருந்தது.அக்காட்டில் ஒடைமரங்களுக்கு சமமாக பனை மரங்களும் ,தன் ஆக்கிரமிப்பை செய்திருந்தது.அப்பனை மரங்களில் ,சில மொட்டைப்பனை மரங்களும் உண்டு.அதில் மைனாக்களும்,கிளிகளும் குடும்பத்தோடு குடித்தனம் நடத்தும்,பாழாய்ப்போன பல மனிதனின் மனம்,ஒன்றாக இருப்பதை பிரிப்பதுதானே வழக்கம்.குடித்தனம் நடத்தும் இடத்தைத் தேடி ,அம்மரத்திலேறி குஞ்சுகளை எடுத்து வளர்க்கவும் செய்வார்கள்.அடுத்த உறவுகளைப் பிரித்த பாவமோ என்னவோ,பிறக்க ஒரு ஊர்,பிழைக்க ஒரு ஊராக,உறவுகளைப் பிரிந்து வாழ்கிறான் போல மனிதன்.

          அக்காட்டினை இரண்டாகப் பிரிப்பதுப் போல்,கடற்கரைக்குச் செல்ல ,சாலையொன்று அமைக்கப்பட்டிருந்தது. அச்சாலையோர ஒடைமரமொன்றின் கீழ்,சுத்தம் செய்யப்பட்டிருந்தது .அந்த இடத்தினைச் சுற்றி,சீட்டுக் கட்டுகள்,மதுப்பாட்டில்கள்,காலியான தண்ணீர் பாக்கெட்கள் சிதறிக் கிடந்தன.பலர் அவ்விடத்திற்கு வந்துப் போன அடையாளங்கள்,அதிக அளவில் காணப்பட்டது.அந்த இடத்தில் ஐம்பத்தைந்திலிருந்து அறுபதுக்குள் வயதிருக்கும் ஒருவர் படுத்து தூங்கி கிடந்தார்.செருப்பை தலைக்கு வைத்துக் கொண்டு ,தலையில் வெள்ளையடித்த முடியுடன்,முன்னாளில் இத்தலையில்,கருப்பு முடிகளும் இருந்தது என அடையாளத்திற்கு சில கருப்பு முடிகளும் இருந்தன.இவர் எழுந்திருப்பதற்குள்,இவரைப் பற்றி பார்த்திடுவோம்.இவர் பெயர்தான் "சீனி மரைக்கார்"...!!

      (தொடரும்...)

     

3 comments:

  1. அருமையான பதிவு

    http://ypvn.myartsonline.com/

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான தொடக்கம்! தொடர்கிறேன்!

    ReplyDelete
  3. நல்லதோர் தொடக்கம். தொடர்கிறேன்.

    ReplyDelete