Sunday 19 June 2016

சீனி மரைக்கார்.!(சிறுகதை) 2


        சிறுவயதில் சீனி மரைக்கார் ,பயந்த சுபாவம் கொண்டவராகத் தான் இருந்தார்.காலப்போக்கில் முன் கோபக்காரராகவும்,முரட்டு குணக்காரராக மாறிப்போனார். அவரது பயந்த சுபவாத்தையறிந்து,சிலர் வன்முறையை அவர்மீது நடத்தியதால் ,கொடுமைக்கார இவ்வுலகத்தில் ,வாழ வேண்டுமென்றால் கோபங்கொண்டேயாக வேண்டும் என்று தன் பாதையை மாற்றிக்கொண்டார்."ஏய்...அவன் கோவக்காரன்பா.."என சிலர் அவர்முன் சொல்ல,சொல்ல ,அவருக்கு கோபம் ஒரு கேடயமாக தெரிந்தது.ஆனால் கொஞ்சம் ,கொஞ்சமாக கோபம் அவரது மனதை விழுங்க ஆரம்பித்து விட்டது.எதற்கெடுத்தாலும் கோபம்தான்.

       பருவ வயதில் வயிற்றுப் பிழைப்பிற்காக,கடல்தொழிலில்தான் ஈடுபட்டார்.ராமேஸ்வரம்,மண்டபம்,ஏர்வாடி என்று கடலுக்குப் போவதும் ,அதில் வரும் வருமானத்தில் வயிற்றைக் கழுவுவதுமாக ,ஏதேனும் மிச்சப்பட்டால்,அவர் அம்மா கையில் கொடுப்பதுமாக இருந்தார்.உடன் வேலைப்பார்த்தவர்கள் உபயமாக "கடல் காத்துக்கு..பீடி இழுத்தா தான் நல்லது"என்று அவர் வாயில் தீயைப் பற்ற வைத்தார்கள்."பாக்குற வேலைக்கு ,கொஞ்சம் "சரக்கு"அடிச்சாத் தான் ஒடம்பு அசதி மாறும்"என்று அவர் வயிற்றில் நெருப்பை ஊற்றினார்கள் .உருப்படத்தான் இங்கே வழி சொல்ல ஆட்கள் குறைவு.நாசமாக்க சொல்லவா வேண்டும்...!?

        ஒரு முறை தன் ஊருக்கு வந்த சீனி மரைக்கார்.கண்மாய்க்கரைக்குள் சாராயம் குடிக்கச் சென்றார்.சாரய வியாபாரி மாணிக்கமோ..

"இந்தா பாரு சீனி ..பழய காசு அம்பதஞ்சி ரூபாய வச்சிட்டு....குடி..அதுக்கு மேலயெல்லாம் கடங்கொடுக்க முடியாது....."என்று சொல்ல,

   "ஆமாம்.. "......"பெரிய கப்பல் யாவாரம் பாக்குறே..."ஊத்து..."......"என்று சீனி சொல்ல...

வார்த்தை தடித்து,மல்லுக்கட்டானது,தெரு நாயாவது கொஞ்சம் நல்லா சண்டைப் போடும்,அதை மிஞ்சி விட்டார்கள்.சீனியும்,மாணிக்கமும்....

  (தொடரும்...)

    

1 comment:

  1. ம்ம்ம்... இந்த இரண்டு பழக்கமும் எத்தனை எத்தனை பேரிடம்.....

    தொடர்கிறேன்.

    ReplyDelete