Wednesday 1 June 2016

இவ்வளவுதான் நான் .....!!


நானொன்றும்
பஞ்சுமெத்தையில்
துயில் கொண்டவனில்லை
வறுமையின் கோர நகங்களால் கிழிபட்டவன்!

நானொன்றும்
காதல்மடியில் தலை சாய்ந்தவனில்லை
காயங்களின் வலியில் வழியமைத்துக் கொண்டவன்!

நானொன்றும்
இலக்கியச் சமுத்திரத்தை மூச்சு முட்ட குடித்தவனில்லை
இம்சைகளின் இடையில் கிடைத்தவற்றை வாசித்தறிந்தவன்!

நானொன்றும்
பணப்பேய் பிடித்து ஆடுபவனில்லை
எவரிடமும் தலைச்சொறிந்து நிற்க கூடாது என்று சம்பாதிப்பவன்!

நானொன்றும்
அறிவுஜீவிகளிடம் அடைகாக்கப்பட்ட முட்டையல்ல
அடிபட்டே வாழ்க்கைப்பாடம் படித்தவன்!

ஆதலால்
என்னிடம் தென்படும் எதார்த்தங்களை எடுத்துக்கொள்ளுங்கள்
தத்துவங்களை தேடாதீர்கள் !

   





2 comments:

  1. அருமை அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete