அது ஒரு மழைக்காலம்.எப்போதுமே காய்ந்த பூமியும்,பிளவுப்பட்ட கரம்பைபளையும் பார்த்தே பழகிப் போனகண்களுக்கு,மழைக்காலமென்பது கனவுலக காலம்.எப்போதும் வெயிலோடு உறவாடும் எங்களுக்குமழைக்காலம் எப்போதாவது வந்து கதைப்பேசும்.மழை என்று சொல்லும்போதும்,வாசிக்கும்போது உள்ளூரஏதோ ஒரு உணர்வு உந்துகிறது,மேகம் மறையும் நிலவாய்,நினைவுகள் பல வந்து வந்து போகிறது.
அந்த மழை நாட்களில்தான்,தெருவோடு ஒடும் தண்ணீரில் காகித கப்பல் விட்டேன்.மாடி வீடுகளில்மேலிருந்து கொட்டும் நீரில் தலைக்குளிப்பேன்,தேங்கி நிற்கும் மழைத்தண்ணீரில் கால் நனைப்பேன்.இப்படிஎத்தனை கதைகளை சொல்லிருக்கும் இந்த மழை என்னிடம்..
மழை நின்றால்,கண்மாய்கள் நிறைந்தால்,எத்தனை அழகாகிடும் என் ஊர்.காய்ந்த இடமெல்லாம்பசுமையாக,தும்பிகளும்,வண்ணத்துப்பூச்சிகளும்,எப்படியெல்லாம் பறந்தோடும்,என் மீதும் முட்டி விட்டுஓடும்,இத்தனைகாலம் காணாமல் போன தும்பிகளும் வண்ணத்துப்பூச்சிகளும்,எப்படி இப்போது வந்துசேர்ந்தது என் மண்ணில்..!?
(தொடரும் ஞாபகங்கள்…)
மழைக்கால நினைவுகள் நன்று. பாராட்டுகள்.
ReplyDelete