புத்தகம்
ஆழ்கடல் மௌனம்
சிப்பியின் தவம்
புத்தகம்
குமரியின் முந்தாணை
குழந்தையின் குறுநகை
புத்தகம்
பசி நேர ருசி
ருசியான பசி
புத்தகம்
பிறப்பின் தாலாட்டு
இறப்பின் ஒப்பாரி
புத்தகம்
இளமை பருவம்
முதுமையின் அனுபவம்
கரங்களை தாங்கும்
புத்தகங்கள்
வாழ்வை மீட்டும்
ஸ்வரங்கள்.!
No comments:
Post a Comment