இளமஞ்சள் வானமான
தேங்காய் சோற்றில்
சிதறிய நட்சத்திரத்திரங்களாய்
வெந்தயங்கள் கிடக்க
பிறைகளாய் வெள்ளை பூண்டு இருக்க.!
மணக்க மணக்க இருந்த கூனி குழம்பில்
முருங்கைக்காயும் கத்தரிக்காயும்
காதலும் கவிதையுமாய் காட்சி தந்தது.!
உணவில் ருசி இருந்தது!
அளவாக நீ கலந்த பொருட்களினால் அல்ல.!
அளவில்லாமல் நீ கலந்த நேசத்தினால்.!
No comments:
Post a Comment