Friday 12 October 2012

நான் என்ன செய்வேன்...!!? (3)

 வீடருகே-
நின்றது-
சப்தம்!

வீட்டில்-
தொடங்கியது-
நிசப்தம்!

இவரு-
குடும்ப தலைவரு!
மொடா-
குடிகாரரு!

ஏனைய இடங்களில்-
தகப்பனுக்கும்-
பிள்ளைக்கும்-
பிரச்னை-
"பிடித்து " போவதில்!

காரணம்-
தகப்பன்-
பெரும்பகுதி-
நேரம் செலவழிப்பது-
உழைப்பில்!

மிச்ச சொச்ச -
நேரமும் கழியுது-
வீட்டு-
சண்டையில்!

குழந்தை-
மனம் முதலில்-
பதிந்து கொள்வது-
தாய் முகத்தை!

எப்படி ஏற்கும்-
அம்முகத்தை-
அடிக்கும்-
கைகளை!

யார் மீது-
தவறு என்பதா-
இங்கே -
முக்கியம்!!??

பிள்ளைகள்-
எதிர்காலம்-
அதை விட-
முக்கியம்!

சண்டை போடும்-
பெற்றோர்களே!

நிலை தடுமாறும்-
உங்கள் மழலைகள்-
நிலைகளே!

சண்டைபோடும்-
பெற்றோர்களால்-
பிள்ளைகள் -
உருவாகிறார்களாம்!

முரடனாகவோ!?
வன்முறையாளன்ஆகவோ!?

ஏன் சைக்கோ -
கொலையாளிகளாகவோ!?

இதை -
மனோவியல்-
சொல்லுது!

ஏனோ-
நாம்மெல்லாம்-
மறந்தது!?

உழைச்ச -
அலுப்பு-
குடிக்கிறார்களாம்!!

அப்போ ஏன்-
மனிதனை விட-
கஷ்டப்படும்-
மாடுகளுக்கு-
புண்ணாக்காம்!?

என்னடி-
புள்ளை வளர்த்தே-என
திட்டுபவர்களே!

என்ன யோக்கியமாக-
நாம வீட்டில்-
நடக்கிறோம்-என்பதை
சிந்தியுங்களேன்!

போதை-
போதை-என
அலையும்-
இக்காலம்!

அது-
அழிவின்-
விரைவுச்சாலை-என்பதை
மறந்ததே-
பெரும்சோகம்!

அரசு எடுத்து-
நடத்துவது-
அதை விட-
கேவலம்!

வழிய வந்து-
வங்கிகள்-
வட்டிக்கு பணம்-
கொடுக்கும்!

பின்பு-
வாங்கியவன்-
தோலை உரிக்கும்!

அது போலதானோ!!?-
தாலிக்கு-
தங்கம்-
இலவசமா!?

அதற்க்கு-
பங்கம் விளைவிக்க-
டாஸ்மாக்கா!!?

தகப்பன்-
அறிமுகம்-
இதுதான்!

இனி-
விடிய விடிய-
ஆட்டம்தாம்..!!

(தொடரும்...)



12 comments:

  1. நடக்கும் உண்மைகள்... தொடர்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. baalan sako!

      ungal aathavukku-
      mikka nantri!

      Delete
  2. நானும் தொடருகிறேன்...

    ReplyDelete
  3. பிள்ளைகள்-
    எதிர்காலம்-
    அதை விட-
    முக்கியம்!

    கவிதைக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. தொடரட்டும்.... கவிதை....

    ReplyDelete
  5. உண்மைகளைக் கொட்டியுள்ளிர்கள் நண்பா

    ReplyDelete
  6. பல குடும்பங்களின் உண்மை நிலை...

    தொடருங்கள்...

    ReplyDelete
  7. நிதர்சனம் அண்ணா! தொடர்கிறேன்!

    ReplyDelete