Friday 19 October 2012

நான் என்ன செய்வேன்...!!? (7)

"டேய் மாப்ள!-என்று
அழைத்தான் -
ஒருவன்!

திரும்பி பார்த்தான்-
இனியவன்!

கூப்பிட்டது-
"கருப்பு நெருப்பு"-என
தனக்கு தானே-
வச்ச பேரு!

"வெள்ளையன்"-இது
அவனை பெத்தவங்க-
வச்ச பேரு!

கிராமங்களில்-
சொல்லுவாங்க-
"கழுதை கெட்டா-
குட்டிய சுவரு!"

இன்று-
குட்டி சுவருகளில்-
இருப்பவர்கள்-
பேரு-
வேறு!

ஆம்-
இப்ப -
"வெட்டி ஆபிசரு"!

அழைத்தவன்-
அந்த ஆபிசரில்-
ஒருவரு!

"என்ன மாப்ள"-
பார்க்காமலே"-
போறே-இது
வெள்ளையன்!

அவனை நோக்கி-
வந்த இனியவன்-
திரும்பி-
போனான்!

"ஏண்டா போறே"-
கேட்டாரு-
வெள்ளையரு!

பார்த்துட்டேன்-
போறேன்-இது
இனியவரு!

கையை பிடித்து-
இழுத்தான்!

கூட அமர சொல்லி-
பல்லிளித்தான்!

குட்டி சுவரில்-
உட்கார்ந்தார்கள்!

சிறிது நேரம்-
மௌனம்-
நிலவியது!

"மாப்ள-
கயல்விழியை -
பற்றி  என்ன-
நினைக்கிறே!?-
வெள்ளையன்!

எந்த கயல்விழி!?-
இனியவன்!

அலுத்து கொண்டு-
சொன்னான்-
"உன் சொந்தக்கார-
புள்ளதான்..!!"

புரியல-
எனக்கு-
"அதை" பற்றி-
என்னிடம் ஏன்-
கேக்குறே-
என்றுதான்!?

"காரணமாகத்தான்-
சொல்லு"-இது
கூப்பிட்டவன்!

என்ன காரணம்னு-
சொல்லு-இது
வந்தவன்!

சரி!
காதலை பற்றி-
என்ன நினைக்கிறே!

"நீயெல்லாம்-
அதை பத்தி-
பேசுவேன்னு-
நினைக்கல!"

உன் அப்பனை-
மாதிரியே-
"எடக்கு மடக்கா "-
பேசாதே!

நீயும்-
சுத்தி வளைச்சி-
பேசாதே!

அப்போ சரி-
மேட்டருக்கு-
வாரேன்-
வெள்ளையன்!

"மேட்டருக்கும்-
வருவியா!?-
இனியவன்!

கடுப்புடன்-
சரி!-
விசயத்துக்கு-
வாரேன்!-
என்றான்!

"இன்னும் வரலியா!?-என
இனியவன்-
கேட்க நினைத்தான்!

ஆனால்-
வெள்ளையன்-
பொறுமையை-
சோதிக்க -
விரும்பவில்லை!

வெள்ளையன்-
சொல்லபோற "விஷயம்-"
இவனது-
தூக்கத்தை-
கெடுக்காது-என்று
சொல்வதற்கில்லை!!

(தொடரும்...)





9 comments:

  1. முடிவில் விஷ(ய)மா...?

    தொடர்கிறேன்... நன்றி...

    ReplyDelete
  2. சொல்லுங்க தெரிந்து கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. muththarasu!

      solkiren...

      vanthamaikku mikka nantri!

      Delete
  3. காத்திருக்கிறோம்

    ReplyDelete
  4. நம்ம தொலைக்காட்சி மெகா சீரியல் கூட இவ்வளவு சீரியசாக போகாது அண்ணா! அடுத்த பதிவை படித்துவிட்டு வருகிறேன்! பாவம் பயபுள்ள தூங்குனானோ என்னவோ????

    ReplyDelete