Monday 8 October 2012

நான் என்ன செய்வேன்...!!? (1)

டிங் டிங் -என்று
மணி காட்டியது-
சுவர் கடிகாரம்!

டண் டண்-என்று
அழைத்தது-
பள்ளி கூடம்!

தேசம் விட்டு-
பறவைகள்-
ஒன்று சேரும்-
இடம்-
வேடந்தாங்கல்!

நட்பு எனும்-
கயிறால் பிணையும்-
இடம்-
பள்ளி கூடங்கள்!

கோடைகால -
விடுமுறைக்கு-
பிறகு!

படிக்கணும் என-
நினைவு வந்தது-
மணி சப்தம்-
கேட்ட பிறகு!

கட்டு பாடு-
மிகுந்த காலம்!

கடுப்புடன்-
செல்லும்-
காலம்!

காலமெல்லாம்-
நினைவுகளில்-
இனிப்பை தடவிடும்-
பள்ளி காலம்!

மழை காலத்தில்-
எங்கிருந்தோ-
கிளம்பும்-
தும்பிகள்-
கூட்டம்போல்!

பிடித்தமானவளின்-
தாவணி முனை-
உரசிடும்போது-
ஏற்படும்-
திடீர்  உணர்வின் -
உயிர்ப்பு போல்!

பள்ளி மைதானம்-
மாறியது-
மைனாக்களின்-
மாநாடு போல்!

சில "மொட்டுக்கள்"-
"பூவாகி -"
இருந்தார்கள்!

பல மலர்கள்-
வறுமையாலும்-
வெயிலாலும்-
காய்ந்து இருந்தார்கள்!

ஒவ்வொரு -
செயலுக்கும்!
எதிர்வினை-
இருக்கும்!

அடக்கு முறைகளால்-
மக்கள்-
அடங்கி விடுவதில்லை!

அவதூறுகள்-
உண்மைகளை-
மறைத்தே -
வைத்திட-
முடிவதில்லை!

பிரிவுகள்-
பாசத்தை-
உரம் போட்டு-
வளர்க்காமல்-
விடுவதில்லை!

பள்ளி ஆரம்பித்தது-
முதல் நாளாக!

வகுப்பறைகள்-
காட்சியளித்தது-
நிரம்பிய பூக்களாக!

மாணவர்களிடையே-
இருந்தான்-
ஒருவன்!

பெயர்-
இனியவன்!

பேரில்-
இனிப்பு-
உள்ளது!

வாழ்வோ-
கசப்பு-
நிறைந்தது!

(தொடரும்...)



22 comments:

  1. நல்ல வரிகள்...

    இன்னும் ஒரு கதையை அறிய ஆவல்... தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. வகுப்பறைகள்-
    காட்சியளித்தது-
    நிரம்பிய பூக்களாக!

    அழகான கவிதை 1

    ReplyDelete
  3. //பேரில்-இனிப்பு-உள்ளது!

    வாழ்வோ-கசப்பு-
    நிறைந்தது!//
    ஒரு பெரிய புதிரோட ஆரம்பிச்சிருக்கீங்க..
    தொடருங்க.. ஆவலோடு இருக்கிறோம்.

    ReplyDelete
  4. ம் (;தொடருங்கள்

    ReplyDelete

  5. பேரில்-
    இனிப்பு-
    உள்ளது!

    வாழ்வோ-
    கசப்பு-
    நிறைந்தது!
    ///
    புதிரான வரிகள்!
    தொடருங்கள் அண்ணா! அருமையான ஆரம்பம்!

    ReplyDelete
  6. பிரிவுகள்-
    பாசத்தை-
    உரம் போட்டு-
    வளர்க்காமல்-
    விடுவதில்லை!//தொடருங்க..

    ReplyDelete
  7. அருமையான வரிகள் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள் தொடருங்கள்.

    ReplyDelete
  8. தொடருங்கள்....
    நானும் தொடர்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  9. தொடருங்கள் நண்பா

    ReplyDelete
  10. பிரிவுகள்-
    பாசத்தை-
    உரம் போட்டு-
    வளர்க்காமல்-
    விடுவதில்லை


    மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. jaleela sako!

      ungal muthal varukaikku mikka nantri!

      Delete
  11. அருமையான வரிகள்! தொடர்கிறேன்! நன்றி!
    எனது வலைப்பூவில் "வழிமேல் விழிவைத்து!" மற்றும் வானும் நிலவும் கவிதைகள்! நன்றி!---காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
    Replies
    1. sesh!

      ungal muthal varavukku-
      mikka nantri!

      Delete