Thursday 25 October 2012

நான் என்ன செய்வேன்...!!? (11)

 சல சலத்து-
செல்லும்-
கண்மாய் -
தண்ணி!

"சிலு சிலுத்து"-
செல்கிறது-
பூவையர்கள்-
குளிப்பதை-
எண்ணி!

பெண்ணானவள்-
பனி கட்டி-
போன்றவள்!

உண்மை-
பாசமென்றால்-
உள்ளங்கையிலும்-
உருகிடுவாள்!

பாசம் -
வேஷம் என்றால்-
உயிரையும்-
உறைய-
 செய்திடுவாள்!

"தம் " பிடித்து-
முக்குளிக்க-
துணிவு உள்ளவர்கள்-
முத்தை -
அடைகிறான்!

புல்லின் நுனி-
பனியிலும்-
பிடித்தமானவளின்-
ஈர முடியில்-
வடியும்-
துளி நீரும்-
காதல் பித்து-
பிடித்தவன்-
முத்தை-
காண்கிறான்!

"பொழுது அடைஞ்சா"-
கோழிகள்-
வீடு திரும்புது!

குளிச்சி விட்ட-
பைங்கிளிகள்-
"கூடு" திரும்புது!

ஒரு கிளி மட்டும்-
சந்து வழி-
வந்தது!

அக்கிளி-
நம்-
கயல் விழி!

குளித்து-
விட்டு-
பனியில்-
நனைந்து கொண்டு-
வருது-
ரோசா!

வருவதை-
எதிர்பார்த்து-
காத்து கொண்டுஇருக்கிறான்-
நம்ம-
ராசா!

எதிர்-
எதிர்-
வருகை!

தூரம்-
அடைந்தது-
குறைவை!

சிரித்து-
கொண்டு-
அவன்-
வந்தான்!

பயந்து-
கொண்டு-
அவள்-
வந்தாள்!

நெருங்கி-
விட்டார்கள்!

வெட்கத்தில்-
"கனன்று-"
விட்டார்கள்!

அவன்-
கையில்-
கொண்டுவந்த-
கடிதத்தை!

யாரும்-
பார்க்கவில்லை-
அவள் கையில்-
திணித்ததை!

பட படத்து-
போனாள்-
அவள்!

சர சர-என
போனான்-
அவன்!

அவளை-
சுற்றி-
குடும்பத்தார்-
படித்திட-
முடியவில்லை-
அக்கடிதத்தை!

அவன்-
வீட்டில்-
பெத்தவளின்-
கண்களில்-
கண்டான்-
கண்ணீரை!

தத்தளித்து-
கொண்டிருந்தாள்-
"அதை"-
பிரித்து-
படித்து விட!

அவன்-
வீட்டை விட்டு-
வெளியேறினான்-
தாய் கண்ணீரால்-
விடை-
பெற்றிட!

அவளுக்கு-
சமயம் கிடைத்து-
பிரித்தாள்-
கடிதத்தை!

அவன்-
அவசரமாக-
அடைந்தான்-
வாகனத்தை!

ஆயிரம் கிளைகள்-
இருந்தாலும்-
தாங்கும்-
ஆணி வேர்-
போல!

ஆயிரம்-
வேலைகள் -
உடல் செய்தாலும்-
உயிர் -
ஒன்று போல!

அண்ட சராசரங்களை-
அடக்கி ஆளும்-
ஒருவனை-
போல!

அத்தனைக்கும்-
விடை இருக்குது-
அக்கடிதத்தின்-
உள்ளே!

(தொடரும்...)


9 comments:

  1. காதலுக்கு முதலே வீட்டை விட்ட எஸ் ஆக ப்ளான் பண்ணிட்டாங்களோ....:)

    தொடருங்கள் கடித்தில் உள்ளதை பார்க்க ஆசையாக இருக்கிறது.
    அடுத்தவன் கடிதமாச்சே

    ReplyDelete
  2. ஆயிரம் கிளைகள்-
    இருந்தாலும்-
    தாங்கும்-
    ஆணி வேர்-
    போல!விடை இருக்கும் கடிதம் ...!!

    ReplyDelete
  3. கவிதை தொடர் அருமை! சிறப்பான முயற்சி! தொடருங்கள் தொடர்கிறேன்!

    ReplyDelete
  4. என்னவென்று அறிய ஆவல்... தொடர்கிறேன்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. balan sako!


      thodar anpirkku mikka nantri!

      Delete
  5. அப்படி அந்த லெட்டர்-ல என்ன இருக்கு???????????
    அதை நானே பார்த்துக்கறேன்!
    தொடர்கிறேன்!

    உங்களது இந்த தொடர் பதிவினை தாமதமாக படிப்பதில் கொஞ்சம் சந்தோஷம் காரணம் உடனுக்குடனே படித்து முடிக்க முடிகிறது!

    ReplyDelete