Thursday 7 July 2016

சீனி மரைக்கார் ..!(சிறுகதை) 9!


   
      ஒடைமர நிழலில் தூங்கிக்கொண்டிருந்த சீனி மரைக்காரின் கையினை ஏதோவொன்று நக்கிடுவதை உணர்ந்து,கையை உதறி விட்டு எழுந்தார் சீனி மரைக்கார்.கண் விழித்தவர்,தன் கையை நக்கிய ,வெள்ளாட்டுக் குட்டியை விரட்டி விட்டுட்டு ,"என்ன திமிரு..இந்த......" பாத்துமாளுக்கு,இவ்வளவு நேரமாகியும் ,என்னைத் தேடி வராம, இருக்கா...."என கோபமாக யோசித்தவர்.திடீரென நினைவு வந்தவராக,தன் சட்டைப் பையினுள் இருந்த ,"செய்யது"பீடியை பற்ற வைத்தார்.இழுத்தார்..இழுத்தார்....தன்னையறியாமலேயே கண்ணீர் வடித்தார்.கதறியழ மனம் வெம்பியது அவருக்கு.

        ஆம்..!! நேற்று கண்மாய்க்கு குளிக்கச் சென்ற பாத்திமா,நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சரிந்தவள் இறந்து விட்டாள்...!!

(முற்றும்)

    

1 comment:

  1. சோகமான முடிவு. இனியேனும் திருந்தட்டும் மரைக்கார்....

    ReplyDelete