Friday 5 December 2014

நீ தான்..நீயே தான்..!!

பள்ளத்தாக்கு நானானேன்!
பசுமை நீயானாய்!

உச்சிமலை நானானேன்!
உரசிடும் வென்மேகம் நீயானாய்!

மணற்வெளி நானானேன் !
நீந்திடும்நதி நீயானாய் !

கவிஞன் நானானேன் !
கவிச்சிந்தனை நீயானாய்!

உதடுகள் நானானேன் !
வார்த்தைகள் நீயானாய் !

பயணம் நானானேன் !
பாதை நீயானாய் !

அதுப்போலவே
வாழ்க்கை நானானேன்!
வசந்தம் நீயேயானாய்!

       

1 comment:

  1. கவிச்சிந்தனைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete