Monday, 30 May 2011

மகளாக தாய்!

என்னை முக்குளித்து -
முத் தெடுதவளை!-

நான்!
முக்குளித்த போது-
முத்தாக-
 கிடைத்தவள்!

முடியவில்லை..!

தண்ணீர் கூட குடித்திடுவேன்-
தலை கீழாக -
நின்று!

பார்க்க கூட முடியவில்லை -
  என்னவளே !-
  உன்னை-
நேருக்கு நேராக -
நின்று!

விலகுவேனா?

நீர் அடிச்சி-
நீர் விலகுவதா!?

நண்பா..!நீ அடிச்சி -
நான் விலகுவதா?

இல்லவே இல்லை!

எல்லையுண்டு -
கடலுக்கு!

எல்லையுண்டா?-
கற்பனைக்கு!!

இழப்பதிலும் லாபம்!

உயிர் இழப்பதுண்டு -
லட்சியவாதிகள்!

அதிலும் உயிரோட்டம் -
அடைவதுண்டு-
 இலட்சியங்கள்!!

'தடுப்பு'எது?


மரங்களுக்கு -
வேலிகளால் -
தடுப்பு உண்டு!

ஊடுருவும் -
வேர்களுக்கு -
தடுப்பு உண்டா?

போராடும் மக்களை-
தடுக்கலாம்!

போராட்டக்காரர்களின்-
நியாயமான குரலின்-
பரவலை தடுக்க-
முடிவதுண்டா!?

வலியும் வேண்டும்!

சீவிய-
 பாலையில் தான் -
பதநீர் வரும்!

பிளந்த -
பூமியில் தான் -
தண்ணீர் வரும்!

சானையிட்டால் தான் -
அறிவாளுக்கும்-
கூர்மை வரும்!

இருண்ட -
இருளில் தான் -
அழகு எனும்-
 நிலவு வரும் !

உடல்பயிற்சியின் -
வலியில் தான் -
உடலுக்கு-
 வலிமை வரும்!

காயம்பட்ட -
உள்ளத்தில் தான் -
கவிதை வரும்!

தோல்வியை -
தாங்குபவனுக்கு தான் -
வெற்றி வரும் !