Monday 30 May 2011

வலியும் வேண்டும்!

சீவிய-
 பாலையில் தான் -
பதநீர் வரும்!

பிளந்த -
பூமியில் தான் -
தண்ணீர் வரும்!

சானையிட்டால் தான் -
அறிவாளுக்கும்-
கூர்மை வரும்!

இருண்ட -
இருளில் தான் -
அழகு எனும்-
 நிலவு வரும் !

உடல்பயிற்சியின் -
வலியில் தான் -
உடலுக்கு-
 வலிமை வரும்!

காயம்பட்ட -
உள்ளத்தில் தான் -
கவிதை வரும்!

தோல்வியை -
தாங்குபவனுக்கு தான் -
வெற்றி வரும் !

No comments:

Post a Comment