Monday 30 May 2011

கண்டதுண்டா!

கருவறையின் காரிருள்
கண்டதுண்டா-அதுவே
அவளின் கூந்தல்!

கருப்பாக இளம்பிறையை
கண்டதுண்டா!-அதுவே
அவளின் புருவம்!

அமாவாசையும் ,பௌர்ணமியும்
சங்கமிப்பதையும் கண்டதுண்டா!-
கருப்பும் வெள்ளையுமாய்
அவளது கண்கள்!

பூக்கள் பூக்கும் சப்தம்
கேட்டதுண்டா!-கேட்கலாம்
அவளது சிரிப்பில்!

நிலவின் முதுகை
கண்டதுண்டா!-அதுவே
அவளது முகம்!

ஆடை மறைத்து கொண்டது
மிச்சத்தை!

பார்த்தல் எழுதுவேன்
சொச்சத்தை!

அவள் பொன்னான
படைப்பு!

யாரும் கண்டிராதவற்றின்
கூட்டமைப்பு!

எண்ணியதை எழுதிவிட்டேன்
எழுத்தில்!

நேரில் சொல்லிவிட
துணிவில்லை மனதில்!

2 comments:

  1. அன்பின் சீனை - பெண்ணை வர்ணிப்பது கவிஞர்களுக்கு கை வந்த கலை. தூள் கெளப்புங்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. அன்பின் சீனா!


      உடனடி வரவிற்கும் -
      கருத்து இட்டமைக்கும் மிக்க நன்றி!

      Delete