சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
கவிதையென்பது
ஒரு கண்ணாடி
அதை எட்டிப்பார்ப்பவர்கள்
முகம்தான் அதில் பிரதிப்பளிக்கும்.!
பூ நிலவு
முள் இருள்
பூ அழகு
முள் அதிகாரம்
பூ மென்மை
முள் வன்மை
பூ நீ
முள் நான்
எனது
கண்ணாமூச்சி ஆட்டத்தில்
தொலைந்ததும்
தேடுவதும்
என்னைத்தான்.!
மனப்புத்தகத்தை
தட்டும்பொதெல்லாம் தூசியாய்
ஞாபகங்கள்.!
நதியிடம்
தன்னை ஒப்படைத்துக் கொண்ட
சருகுகள் கிழிப்படுவதில்லை.!
பாதங்கள் எனதென்றாலும்
பாதை நீ காட்டியது.!
பார்வைகள் பசியாரும்போது
வார்த்தைகள்
வீண்விரயம்தான்.!