Tuesday, 30 November 2021

வளையல்.!

 வானவில்லை வளைத்தா

வளையல்கள் செய்தா(ய்).!?

Monday, 29 November 2021

கவிதை..!

 துளையிட்ட குழலில்

நுழைந்திட்ட காற்று

இசையாவதுப் போலவேதான்

என்னுள் தங்கிய நினைவுகள்

கவிதைகளாகிறது.!

வீணை.!

 விரல்கள் தீண்டாதவரை

வீணைகள் மௌனம் கலைப்பதில்லை.!

இதயம்.!

 பூக்களைத் தேடும்

தேனீயைப்போலவே

காயப்பட்ட இதயங்கள்

வார்த்தைகளைத் தேடும்.!

சொற்கள்.!

 சொற்கள் மட்டும் இல்லாதிருந்தால்

என்னை நான் எங்கேப் போய்

ஊற்றி வைப்பேன்.!?

Sunday, 28 November 2021

வாழ்க்கை.!

 வாழ்வதென்பதென்ன

சொர்க்கப்பூஞ்சோலையா.!?

அமைதியாய் துயில் கொள்ள..!

மழை.!

 மேகக்குளத்திற்குள்

யார் கல்லெரிந்தது..!?