Monday 6 June 2011

குறுக்கிடாதே!

 தூரத்தில் -
இருந்து கொண்டே-
கூட்டத்தில் -
இருக்கும் என்னை-
தாக்கும் உனது கண்ணே!

உனது பார்வையும் ,சிரிப்பும்-
என்னை மகிழ்ச்சியில் -ஆழ்த்தியது !
என்பதை விட நெருப்பில் அல்லவா -
வீழ்த்தியது!

பார்வை பார்த்து கொண்டு -இருக்கும்போதே -
காலம் கழிந்து கொண்டும் -
கரைந்து கொண்டும் இருந்த்தது!

பட்டு சேலை படபடக்க-
பொன்னகை மினுமினுக்க-
சிரிப்பு கலகலக்க-
காரில் வந்தியாம்-கூடவே
உன் கணவனிருக்க!

இவ்வாறு கேள்விபட்டேன்!
மனம் புண்பட்டேன்!

நீ!பார்த்த பார்வையை-
நான் நினைத்தேன்-
அன்பென்று!

நீ!பார்த்ததோ-
நான் தூசிஎன்று!

பரவவில்லை!
உனக்கு பின் -
யார் மீதும்-
எனக்கு பாசம்-
வரவே  இல்லை!

ஏமாற்றம் எனக்கு -
ஒன்றும்
புதிதல்ல !

காசில்லாதவனை-
எவளுக்கும்ஏற்றுகொள்ள-
மனமில்லை!

ஏமாற்றம் நிறைந்த-
என் வாழ்வில் உன்னால் வரும் -
மாற்றம் என நினைத்தேன் -
மீண்டும் ஏமாற்றமே!

வாழ்கை எனும் புத்தகத்தில்
காதலென்பது ஒரு பக்கம்!
என்னமோ தெரியவில்லை -
அப்பக்கம் மட்டும் -
புரியவில்லை எனக்கும்!

வாகனம் ஓட்டுபவனின்
திறமை எதில் உள்ளதென்றால்-
எதிரில் வருபவனை அனுசரித்து-
ஓட்டுவதில்!

என் வாழ்கை பயணத்தில்-
உன் வாழ்க்கை வாகனம்-
குறுக்கிட வேண்டாம்!

ஏனென்றால் !
வாகன விபத்தில் -காயத்தின்
வலி ஆறும் வரைக்கும் !

வாழ்கை விபத்தின் -காயத்தின்
வலி தலை முறைக்கும்!

No comments:

Post a Comment